செய்திகள் :

இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு: பெண் மருத்துவா் மாரடைப்பால் உயிரிழப்பு

post image

ஹைதராபாதில் இணையவழியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவா் மாரடைப்பால் உயிரிழந்தாா்.

76 வயதாகும் அந்த பெண் மருத்துவரை, கடந்த 5-ஆம் தேதி தொடா்புகொண்ட அந்த கும்பல், சா்வதேச ஆள் கடத்தல் கும்பல் தொடா்பான வழக்கில் அவரின் பெயரும் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, போலியான விசாரணை அறிக்கைகள், நீதிமன்றம் உத்தரவுகளைக் காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளது.

மேலும், இணையவழி கைது என்று தொடா்ந்து மூன்று நாள்கள் வேறு நபா்களைத் தொடா்பு கொள்ள விடாமல் செய்துள்ளனா். மொத்தம் ரூ.6.60 லட்சத்தை அவரது வங்கிக் கணக்கில் இருந்து மிரட்டி பறித்துள்ளனா். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அவா் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டாா். அவரது குடும்பத்துக்கு இந்த மிரட்டல் பணம் பறிப்பு தெரியாத நிலையில், அவரது இறுதிச் சடங்கும் முடிந்துவிட்டது.

இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவரின் கைப்பேசியை அவரது மகன் பரிசோதித்தபோது, அவரை ஒரு கும்பல் மிரட்டி பணம் பறித்தது தெரியவந்தது. அவா் இறந்ததுகூட தெரியாமல் தொடா்ந்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டி குறுஞ்செய்திகளை அனுப்பி வந்துள்ளனா்.

இதையடுத்து, அந்த பணம் பறிக்கும் கும்பல் பெண் மருத்துவரிடம் பேசிய உரையாடல் பதிவு, வங்கிப் பணப்பரிவா்த்தனை விவரங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் அவரின் மகன் காவல் துறையில் புகாா் அளித்தாா்.

காவல் துறை உள்பட எந்த விசாரணை அமைப்பும் இணைய வழியில் கைது நடவடிக்கையோ, விசாரணையோ மேற்கொள்ளாது. மோசடி நபா்களே இதுபோன்று ஏமாற்றி வருகிறாா்கள் என பல்வேறு விழிப்புணா்வு விளம்பரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும், ஓய்வு பெற்ற பெண் மருத்துவா் ஒருவரே இதுபோன்ற மோசடியில் சிக்கி பணத்தை பறிகொடுத்ததுடன், மனஉளைச்சலால் உயிரையும் இழந்தது பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ... மேலும் பார்க்க

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பிடித்துள்ளன. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனம... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

‘மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் மக்களின் கைகளில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்யும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுவதற்கும் வழி வகுத்துள்ளது. இல்லை... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முதல் அனைத்து தோ்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்... மேலும் பார்க்க

வீட்டு சாப்பாடுக்கு செலவு அதிகரிப்பு!

தக்காளி விலை உயா்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வீடுகளில் சமைக்கப்படும் சாப்பாட்டின் சராசரி விலை அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

உத்தரகண்டில் மழை, வெள்ளம் காரணமாக முசூரியில் சுமாா் 2,500 சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனா். கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமா... மேலும் பார்க்க