"வருண் சக்கரவர்த்தியை இந்தப் போட்டியில் பயன்படுத்தாதீங்க, ஏன்னா..!" - கம்பீருக்க...
இந்திய அரிசிகளுக்கு வரியை அதிகரிக்கிறாரா ட்ரம்ப்? இதில் பாதிக்கப்பட போவதென்னவோ அமெரிக்காதான்
இந்தியா உடனான பேச்சுவார்த்தை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது... இந்திய பிரதமர் மோடி என் நல்ல நண்பர்... இந்தியா உடனான விரிசல் தற்காலிகமானது தான்... என்று கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா குறித்து பேசிவந்தார்.
இப்போது என்ன ஆனதோ... ஏது ஆனதோ அந்தர்பல்டி அடித்து இந்தியாவிற்கு எதிராகப் பேசியிருக்கிறார்.

ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
நேற்று வெள்ளை மாளிகையில் பேசியிருக்கும் ட்ரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் அரிசிக்கும், கனடாவில் இருந்து இறக்குமதி ஆகும் உரங்களுக்கும் அதிக வரி விதிக்க உள்ளதாகக் கூறியிருக்கிறார். அதுவும் இதை அமெரிக்க விவசாயிகளுக்காகச் செய்வதாகக் கூறியுள்ளார்.
பல நாடுகளுடன் வணிக ஒப்பந்தத்தை எட்டிவிட்டது அமெரிக்கா. ஆனால், இன்னமும் இந்தியா மற்றும் கனடா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்தவொரு முடிவும் எட்டியபாடில்லை.
இந்த நிலையில் தான், ட்ரம்ப் வரி குறித்து பேசியுள்ளார்.
ட்ரம்ப் ஃபார்முலா
இதை இன்னொரு பக்கம் பார்த்தால், ட்ரம்ப் இதுகுறித்து பேசியிருக்கும் தருணம் மிக முக்கியமானது என்றும் கூறலாம். நாளை வர்த்தக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வருகிறார்கள். இந்த சூழலில் ட்ரம்ப் இப்படி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.
காரணம், அவர் ஒவ்வொரு நாட்டையும் வரியைக் காட்டிதான் மிரட்டி வருகிறார். அதே ஃபார்முலாவை இந்தியாவிற்கு ஃபாலோ செய்கிறாரா என்கிற சந்தேகம் எழுகிறது.

அடுத்ததாக, இந்த வரியால் இந்தியா பாதிக்கப்படுமா... அமெரிக்கா பாதிக்கப்படுமா என்று பார்த்தால், அமெரிக்கா தான் பாதிக்கப்படும்.
காரணம், இந்தியா தனது மொத்த அரிசி ஏற்றுமதியில் வெறும் 3 சதவிகிதம் மட்டுமே அமெரிக்காவிற்கு செய்கிறது. ஆனால், அமெரிக்கா இந்தியாவில் இருந்து தனது 25 சதவிகித பயன்பாட்டிற்கு அரிசியை இறக்குமதி செய்கிறது.
இதனால், இந்த விஷயத்தில் ட்ரம்ப் மிக கவனமாக இருக்க வேண்டும்.












