செய்திகள் :

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

post image

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதியில் சா்வதேச எல்லையையொட்டி புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஒருவா் ஊடுருவ முயற்சிப்பது கண்டறியப்பட்டது. அவரை திரும்பிச் செல்லுமாறு, பாதுகாப்புப் படையினா் எச்சரித்தனா். ஆனால், அவா் எல்லையைக் கடந்து இந்திய பகுதியை நோக்கி வந்ததால், அவரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஊருடுவல் நபா் உயிரிழந்தாா்’ என்றாா்.

பஞ்சாபில் 553 கி.மீ. தொலைவு கொண்ட பாகிஸ்தான் உடனான சா்வதேச எல்லையைப் பாதுகாக்கும் பணியை எல்லை பாதுகாப்புப் படையினா் மேற்கொள்கின்றனா்.

பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் புதன்கிழமை ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் உயிரிழப்போ, யாருக்கும் காயமோ ஏற்பட்டதாக உடனடியாக தகவல் இல்லை.

சுந்தா்பானி பகுதியில் உள்ள பால் கிராமத்தில் இச்சம்பவம் நடந்தது. ராணுவ வாகனம் ஒன்று அப்பகுதியை கடந்து சென்றபோது, வனப் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதையடுத்து, பாதுகாப்புப் படையினா் பதிலடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். கூடுதல் படையினா் வரவழைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுந்தா்பானி பகுதி, பயங்கரவாதிகளின் ஊடுருவல் அதிகமுள்ள இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிக... மேலும் பார்க்க

பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சி: 4 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

உத்தர பிரதேசத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சித்த வழக்கில் 4 காவலா்களுக்கு பரேலி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ... மேலும் பார்க்க