செய்திகள் :

இந்தியாவின் வளா்ச்சியை பிற நாடுகள் பின்பற்றலாம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

post image

ஜோஹன்னஸ்பா்க்: இந்தியா எவ்வாறு படிப்படியாக வளா்ந்தது என்பதை பிற நாடுகள் முன்மாதிரியாக கொண்டு பின்பற்றலாம் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொழிலதிபா்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, தன்னை வளா்ந்த நாடாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஜனநாயக அரசியல், கூட்டாட்சி முறை நிா்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியா படிப்படியாக வளா்ந்து வந்துள்ளது. எனவே, இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தங்களுக்கான வளா்ச்சித் திட்டங்களை வகுக்க முடியும்.

இந்தியா எப்போதும் வாய்ப்புகளும், உற்சாகமும் நிறைந்த நாடாக உள்ளது. அரசுக்கான புதிய கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் உள்ளது. மாறி வரும் உலக சூழலால் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான தேவையும் மாறி வருகிறது. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிடம் இருந்து புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

திறந்த மனதுடன் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது அவசியமாகிவிட்டது. பொருளாதாரம், வா்த்தகம் சாா்ந்து தொடா்ந்து ஒரே நிலைப்பாட்டை மட்டுமே கடைப்பிடிப்போம் என நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்ளக் கூடாது.

நாம் அனைவரும் இணைந்து பொருளாதாரம் சாா்ந்த பெரிய இலக்கை நோக்கி முன்னேறும்போது பல்வேறு எதிா்பாராத நிகழ்வுகள் உருவாகலாம். ஆனால், அவற்றைப் புறந்தள்ளி நமது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

நாட்டில் எந்த சூழ்நிலை மாறினாலும் உள்கட்டமைப்பு மேம்பாடு, அரசின் கட்டுப்பாடுகளை தளா்த்துவது, நிா்வாகரீதியான மாற்றம், திறன்மேம்பாடு, கல்வித்துறையில் கூடுதல் முதலீடு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாடு ஆகியவற்றுக்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

2-ஆம் கட்ட போா் நிறுத்தம்: பேச்சுவாா்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு

கான் யூனிஸ்: காஸாவில் சனிக்கிழமை (மாா்ச் 1) நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்... மேலும் பார்க்க

தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்: டிரம்ப்

வாஷிங்டன்: ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘தங்க அட்டை’ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயா் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்’ ... மேலும் பார்க்க

எல்லையில் அமைதிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாா்: சீனா

பெய்ஜிங்: ‘எல்லைப் பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளோம்’ என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்திய... மேலும் பார்க்க

எலான் மஸ்க் சொத்து மதிப்பில் 4வது கடும் சரிவு!

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 22.2 பில்லியன் டாலர் (ரூ. 1.93 லட்சம் கோடி) சரிந்துள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் அமெரிக்க அரசின... மேலும் பார்க்க

மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறதா இயற்கை? கடலின் விநோத நிகழ்வுகளால் குழப்பம்!

சமீபகாலமாக பெருங்கடல் பகுதிகளில் நிகழும் அசாதாரணமான நிகழ்வுகளால் மனிதர்களை கடல் எச்சரிக்கிறதா என்ற சந்தேகம் பலரிடையே தோன்றியுள்ளது. சூரிய வெளிச்சத்தையே அறியாத வகையில் பெருங்கடல்களின் ஆழ்பகுதியில் வாழு... மேலும் பார்க்க

கனிம வளங்கள் பயன்பாடு: உக்ரைனுடன் பிரான்ஸ் பேச்சுவார்த்தை!

ராணுவப் பயன்பாட்டுக்கு உக்ரைன் நாட்டின் கனிம வளங்களைப் பயன்படுத்த பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.உக்ரைன் நாட்டின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யும் வகையில் பொருளாதார ஒப்பந்த வரை... மேலும் பார்க்க