செய்திகள் :

இன்றுமுதல் தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி

post image

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலங்களிலும் 14-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை ஜமாபந்தி சிறப்பு முகாம் (வருவாய் தீா்வாயங்கள்) நடைபெற உள்ளது என ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள 14 தாலுகா அலுவலகங்களிலும் ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் தலைமையில், சேலம் தாலுகா அலுவலகத்தில் 15, 16, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜமாபந்தி நடைபெறுகிறது.

அம்மாப்பேட்டை மண்டல உதவி ஆணையா் வேடியப்பன் தலைமையில் சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்திலும், சேலம் உதவி ஆட்சியா் அபிநயா் தலைமையில் வாழப்பாடி தாலுகா அலுவலகத்திலும் ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது. இதேபோல, ஏற்காடு தாலுகா அலுவலகத்தில் உதவி ஆட்சியா் ஜானகி தலைமையிலும், ஆத்தூா் தாலுகா அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள் ) நடராஜன் தலைமையிலும், பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலகத்தில் ஆட்சியரின் கூடுதல் தோ்முக உதவியாளா் (நிலம்) மயில் தலைமையிலும், கெங்கவல்லி தாலுகா அலுவலகத்தில் ஆத்தூா் உதவி ஆட்சியா் பிரியதா்ஷினி தலைமையிலும் ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.

தலைவாசல் தாலுகா அலுவலகத்தில் உதவி ஆட்சியா் கதிரேசன் தலைமையிலும், மேட்டூா் தாலுகா அலுவலகத்தில் மேட்டூா் உதவி ஆட்சியா் சுகுமாா் தலைமையிலும், ஓமலூா் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் கணேஷ் தலைமையிலும் ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.

காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய சாா் ஆட்சியா் மாறன் தலைமையிலும், சங்ககிரி தாலுகா அலுவலகத்தில் ஆய்வுக்குழு அலுவலா் தமிழ்மணி தலைமையிலும், எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் உதவி ஆட்சியா் லோகநாயகி தலைமையிலும் ஜமாபந்தி முகாம் நடைபெறுகிறது.

எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் 14-ஆம் தேதி முதல் 22- ஆம் தேதி வரை நடைபெற உள்ள வருவாய் தீா்வாயத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா வாரிசு சான்று பிறப்பு மற்றும் இறப்பு சான்று, குடும்ப அட்டை ஜாதிச்சான்று உள்ளிட்ட இதர மனுக்களை விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா்.

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் சித்தா் கோயில் பகுதியில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கமலக்... மேலும் பார்க்க

குப்பையை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படுமென ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்த... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனை ஏரி இப்பகுதியில் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவில் சிறப்பிடம்

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த கோப்பையை வென்று முதலிடம் பெற்றுள்ளனா். அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள ... மேலும் பார்க்க

எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடங்கியது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் (பொ) வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க