செய்திகள் :

இன்ஸ்டாவில் பழகி, லிவ் இன் உறவில் இருந்த பெண் போலீஸை கொன்ற CRPF வீரர்.. என்ன நடந்தது?

post image

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள அஞ்சார் போலீஸ் நிலையத்தில் உதவி சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அருணாபென்.

இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் திலீப் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

திலீப்

திலீப் மணிப்பூரில் வேலை செய்து வந்தார். விடுமுறைக்கு வரும்போது அருணாபென்னுடன் தங்கி இருப்பது வழக்கம். தற்போது விடுமுறைக்கு வந்து அருணாவுடன் திலீப் தங்கி இருந்தார். இருவரும் அகமதாபாத்திற்கு ஷாப்பிங் சென்று வந்தனர். வந்த பிறகு இருவருக்கும் இடையே இரவில் வாக்குவாதம் ஏற்பட்டது.

திலீப் தாயார் குறித்து அருணா ஏதோ தவறாக பேசி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபத்தில் திலீப் அருணாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார்.

அதன் பிறகுதான் கொலை செய்துவிட்டோமே என்ற அச்சத்தில் தானும் தற்கொலை செய்து கொள்ள திலீப் முயன்றார். கையில் வெட்டிக்கொண்டு வீட்டில் இருந்த பினாயிலை எடுத்து குடித்தார். ஆனால் அதில் தப்பித்துக்கொண்டார். அவர்கள் இருவரும் வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அவர்களது வீட்டில் இருந்து இரவில் சண்டை போட்டுக்கொண்ட சத்தம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் கேட்டது. ஆனால் அவர்கள் போலீஸில் சொல்லவில்லை.

கொலை

இரவு 10 மணிக்கு கொலை செய்த திலீப் இரவு முழுவதும் அருணாவின் உடலுடன் இருந்தார். காலையில் அருணா வேலை செய்து வந்த போலீஸ் நிலையத்திற்கு சென்று அருணாவை கொலை செய்துவிட்டதாக கூறி திலீப் சரணடைந்தார்.

உடனே போலீஸார் விரைந்து சென்று அருணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திலீப்பை கைது செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் விசாரணையில் இருவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், நீண்ட காலமாக இருவரும் நட்பில் இருந்து வந்துள்ளனர் என்றும் தெரிய வந்ததுள்ளது.

``என் மரணத்துக்கு காரணம்..'' - நொய்டா பல்கலை. மாணவி கடிதம்; பேராசிரியர்கள் கைது.. என்ன நடந்தது?

டெல்லி அருகில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இருக்கும் சார்தா பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் படித்து வந்த மாணவி ஜோதி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை... மேலும் பார்க்க

சிகிச்சையில் இருந்த மனைவியை மருத்துவமனைக்குள் புகுந்து குத்தி கொன்ற கணவர்; குளித்தலையில் கொடூரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர், ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் ஸ்ருதி (வயது: 27) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள... மேலும் பார்க்க

நாமக்கல்: கடன் தொல்லையால் ரூ. 4 லட்சத்திற்கு கிட்னியை விற்ற பெண்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக ஏழை தொழிலாளிகளைக் குறிவைத்து சிலர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவர்களின் கிட்னியை விற்பதாகப் புக... மேலும் பார்க்க

மும்பை ரயில் நிலையம்: பாலியல் உறவுக்கு மறுத்த பெண்; ரயிலில் தள்ளிக் கொன்ற நபர்; என்ன நடந்தது?

மும்பை ரயில் நிலையங்களில் பொதுவாகவே எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். மும்பை புறநகரில் உள்ள திவா ரயில் நிலையத்திலிருந்து மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதிக்கு நீண்ட தூர ரயில்கள் இயக்கப்படுகின்றன.இந்த ர... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: குழந்தைகள் கண் முன் தாய் வெட்டிக் கொலை; சாயல்குடி அருகே கொடூரம்; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது வெட்டுக்காடு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெர்மின் (34). இவருக்கும் எல்லை பாதுகாப்புப் படை வீரரான விஜய கோபால் என்பவருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு ... மேலும் பார்க்க

``மது போதையில் தினமும் செக்ஸ் டார்ச்சர்'' - விசிக நிர்வாகியை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள உதயசூரியன்புரத்தை சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது: 54). இவர், விடுதலைச் சிறுதைகள் கட்சி மேற்கு மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகவும், ஆம்னி பஸ் ஓட்டுனராகவும் பணிபு... மேலும் பார்க்க