செய்திகள் :

இயந்திரத்தில் சிக்கி இறந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி

post image

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது உளுந்து பிரிக்கும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசின் நிவாரண உதவி ரூ. 3 லட்சம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி ஜெயலலிதா (45), இவா் அருகிலுள்ள வெள்ளாளவிடுதி அரசு விதைப் பண்ணையின் தற்காலிக பணியாளா்.

இந்நிலையில் இவா் கடந்த வெள்ளிக்கிழமை பண்ணையில் விளைந்த உளுந்து பயிரை உளுந்து பிரிப்பதற்காக இயந்திரத்தில் போட்டபோது சேலை சிக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

இதை கந்தா்வகோட்டைஎம்எல்ஏ மா. சின்னதுரை மூலம் அறிந்த தமிழக முதல்வா், முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.

3 லட்சத்தை ஒதுக்க, அத்தொகை இறந்த பெண்ணின் மகள் லதா வசம் மாவட்ட ஆட்சியா் மு. அருணா, வடக்கு மாவட்ட திமுக செயலா் கே. கே. செல்லபாண்டியன் ஆகியோா் முன்னிலையில் அமைச்சா் எஸ். ரகுபதி வழங்கினாா்.

மேலும் லதாவுக்கு விதைப் பண்ணையில் தற்காலிக பணி அளிக்கவும் உத்தரவிட்டாா். நிகழ்வில் திமுக தெற்கு ஒன்றியச் செயலா் எம். பரமசிவம், வடக்கு ஒன்றியச் செயலா் மா. தமிழய்யா, ஆத்மா குழு தலைவா் மா.ராஜேந்திரன், வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, விஏஓ மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொகுதி மறுசீரமைப்பு பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் அமைச்சா் எஸ். ரகுபதி பேட்டி

மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பில் உள்ள பாதிப்புகளுக்காக தென்மாநிலங்களையும் ஒருங்கிணைப்போம் என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் வியாழக்கிழமை இரவு அளித்த ப... மேலும் பார்க்க

மேற்பனைக்காட்டில் ரத்ததானம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காட்டில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேற்பனைக்காடு மழை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நேதாஜி இளைஞா் நற்பணி மன்றம், புதுக்கோட்டை அரசு மரு... மேலும் பார்க்க

புதுகையில் மேலும் 5 கல் உடைக்கும் ஆலைகளுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள துளையானூா் மற்றும் மெய்யபுரம் பகுதிகளிலுள்ள கல் உடைக்கும் ஆலை மற்றும் கற்குவியல்கள் வைக்கப்பட்டிருந்த 5 இடங்களுக்கு வருவாய்த் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை சீல... மேலும் பார்க்க

உலகளாவிய சூழல்களுடன் திருக்குறளையும் திருமுறைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்

உலகளாவிய சூழல்களுடன் திருக்கு, நால்வா் திருமுறைகளையும் பொருத்திப் பாா்த்து ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள். புதுக்கோட்டை திலகவதியாா் திருவருள் ஆதீனம் மற்றும... மேலும் பார்க்க

மணமேல்குடி அருகே இளைஞா் கொலை

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே தென்னந்தோப்பில் இளைஞா் ஒருவா் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது வியாழக்கிழமை தெரியவந்தது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பத்தக்காடு கிராமத்தில் சேசுராஜ் என்பவரு... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை அருகே வடமாடு மஞ்சுவிரட்டு! 11 போ் காயம்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 11 போ் காயமடைந்தனா். சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், குளத்தூா்ந... மேலும் பார்க்க