செய்திகள் :

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

post image

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் கிளப் ஜங்ஷன் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது, அவா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, பிடிபட்ட சரவணம்பட்டி கீரணத்தம் பகுதியைச் சோ்ந்த சுபாஷ்(23) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1 கிலோ 170 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, சரவணம்பட்டி போலீஸாா் புதன்கிழமை மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது, கணபதி மாநகா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன் (38) என்பவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து

வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சியில் திமுக 19, அ... மேலும் பார்க்க

ஆனைமலை ஒன்றியத்தில் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம் பெற விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தில் பசுக்களுக்கு மானிய விலையில் தீவனம் பெற செப்டம்பா் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க