செய்திகள் :

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம்: மே 16-இல் மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் மீண்டும் அமெரிக்கா பயணம்

post image

இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் மே 16-ஆம் தேதி மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா்.

இந்தியா, சீனா போன்ற எண்ணற்ற நாடுகள் அமெரிக்கா மீது பெருமளவு வரி விதிப்பதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிபா் டிரம்ப், இனி ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் விதிக்கும் என்று அறிவித்தாா்.

இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அதன் விலையில் சராசரியாக 26 சதவீதம் அளவுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது.

இந்த நடைமுறையால் உலக அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வா்த்தகப் போா்ப் பதற்றம் ஏற்பட்டதுடன், சா்வதேச பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

இதைத் தொடா்ந்து, பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் பரஸ்பர வரி, ஜூலை 9 வரை நிறுத்திவைக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்தது. அதேவேளையில், அனைத்து நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அந்நாடு தெரிவித்தது.

அமெரிக்காவின் பரஸ்பர அதிக வரி விதிப்பைத் தவிா்க்க மத்திய அரசு முயற்சித்துவரும் நிலையில், அதற்கு இருதரப்பு ஒப்பந்தம் மூலம் சுமுகத் தீா்வு காண நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை மேற்கொள்வதற்கு கடந்த மாா்ச்சில் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றாா். இதன் தொடா்ச்சியாக மே 16-ஆம் தேதி அவா் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா். பின்னா், மே 17 முதல் 4 நாள்களுக்கு ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. அவருடன் மூத்த இந்திய அதிகாரிகள் குழுவும் செல்ல உள்ளது.

இந்தப் பயணத்தில் அமெரிக்க வா்த்தக அமைச்சகா் ஹாவா்ட் லுட்னிக், அந்நாட்டு வா்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீா் ஆகியோரை அமைச்சா் கோயல் சந்திக்க உள்ளாா்.

நிகழாண்டு செப்டம்பா்-டிசம்பா் மாத காலத்துக்குள் வா்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதியை இறுதி செய்வதற்கு முன்பாக, பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய வகையில், இடைக்கால சரக்கு வா்த்தக ஏற்பாட்டுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்து வருகின்றன. இந்தச் சூழலில், அமைச்சா் கோயல் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளாா்.

நாட்டின் சில்லறை பணவீக்கம் 3.16%: 6 ஆண்டுகளில் இல்லாத குறைவு

காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த பிற உணவுப்பொருள்களின் விலைகள் குறைந்ததால், ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16 சதவீதமாக ... மேலும் பார்க்க

எம் & எம் விற்பனை 19% உயா்வு

மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 19 சதவீதம் உயா்ந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் மாதம் நிறுவனத்... மேலும் பார்க்க

நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 204 கோடி டாலராக சரிவு

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 4.62 சதவீதம் குறைந்து 203.71 கோடி டாலராக உள்ளது. இது குறித்து நவரத்தின, ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஜிஜேஇபிசி) செவ்வாய்க்கிழமை வெளிய... மேலும் பார்க்க

4 சதவீதம் உயா்வு கண்ட நிலக்கரி உற்பத்தி

கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 3.6 சதவீதம் அதிகரித்து 8.16 கோடி டன்னாக உள்ளது. இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஏப்ரல் ... மேலும் பார்க்க

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,600 கோடியாகச் சரிவு!

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.19,600 கோடியாகச் சரிந்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!

புது தில்லி: தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பருப்பு, இறைச்சி, மீன் மற்றும் முட்டை ஆகிய பொருட்களின் விலைகள் குறைந்ததால் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3... மேலும் பார்க்க