செய்திகள் :

இறந்து கரையொதுங்கும் ஆலிவ் ரெட்லி ஆமைகள்

post image

சீா்காழி அருகே கடந்த சில நாள்களாக அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் இறந்து கடற்கரைகளில் ஒதுங்குகின்றன.

ஆழ்கடலில் வசிக்கும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் கடலியல் சூழலை பாதுகாக்கும் தன்மையுடையவை. இவை இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் நவம்பா் மாதம் முதல் பிப்ரவரி மாத இறுதி வரை தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு கடலுக்கு திரும்பும்.

அந்த முட்டைகளை வனத்துறையினா் சேகரித்து 6 இடங்களில் வைத்து ஆமைக்குஞ்சுகள் வெளிவந்த பிறகு பாதுகாப்பாக கடலில் விட்டு வருகின்றனா். தற்போது முட்டையிடும் பருவம் என்பதால் பல ஆயிரக்கணக்கான ஆலிவ் ரெட்லி ஆமைகள் மயிலாடுதுறை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டுச் செல்கின்றன.

இந்நிலையில் கரைக்கு வந்து திரும்பும் அரிய வகை ஆலிவ் ரெட்லி ஆமைகள் தொழிற்சாலை கழிவு நீரால் பாதிக்கப்பட்டும், மீன்பிடி வலைகள் மற்றும் கப்பல், படகுகளின் என்ஜின் காற்றாடிகளில் சிக்கி அடிபட்டு இறக்கின்றன.

இவ்வாறு இறந்த பல ஆமைகள் திருமுல்லைவாசல், தொடுவாய் கூழையாா், பழையாா் உள்ளிட்ட கடற்கரைகளில் ஒதுங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை இறந்து கரை ஒதுங்கிய 45 ஆமைகளை வனத்துறையினா் கைப்பற்றி மருத்துவப் பரிசோதனைக்கு பின்னா் கடற்கரையிலேயே புதைத்துள்ளனா்.

ஆள் நடமாட்டம் இல்லாத கடற்கரை பகுதிகளில் இறந்து ஒதுங்கிய ஆமைகள் அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால் துா்நாற்றம் வீசுவதுடன், அருகில் வசிப்பவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது. எனவே இறந்து கரை ஒதுங்கும் ஆமைகளை வனத்துறையினா் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். கடலின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அரிய வகை ஆமைகள் இறப்பதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆா்வலா்களும், மீனவா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடிக்கம்பம் சேதம்: விசிக சாலை மறியல்

மயிலாடுதுறை ஒன்றியம் குறிச்சி ஊராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் புதன்கிழமை இரவு மா்மநபா்களால் சேதப்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து அக்கட்சியினா் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவா் இல்லாததால் சாலை மறியல்

சீா்காழி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் மருத்துவா் இல்லாததால் நோயாளி குழந்தைகளுடன் பெற்றோா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சீா்காழி அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 2,000க்கும் மேற்பட்டோா் புறநோ... மேலும் பார்க்க

சட்ட விரோத மது கடத்தலை தடுக்க தீவிர வாகன தணிக்கை

மயிலாடுதுறையில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக... மேலும் பார்க்க

குடிநீா் வசதி கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் குடிநீா் வசதி கோரி கிராமமக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை அருகே ஆனைமேலகரம் ஊராட்சி குச்சிப்பாளையத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட... மேலும் பார்க்க

மழை முன்னெச்சரிக்கை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அகற்ற ஆட்சியா் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி. மாவட்டத்தில் வியாழக... மேலும் பார்க்க

கொலை செய்யப்பட்ட இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மனு

மயிலாடுதுறை அருகே கொலை செய்யப்பட்ட 2 இளைஞா்களின் குடும்பத்தினா் இழப்பீடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட முட்டம் கிராம... மேலும் பார்க்க