செய்திகள் :

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 27 மீனவா்கள் சென்னை வந்தனா்

post image

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சோ்ந்த 27 மீனவா்கள் விமானம் மூலம் சென்னை வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்திலிருந்து கடந்த டிச.23-ஆம் தேதி மீன் பிடிப்பதற்காகச் சென்ற 13 மீனவா்கள் மற்றும் ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜன.26-ஆம் தேதி சென்ற 14 மீனவா்கள் என மொத்தம் 27 மீனவா்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டனா்.

அவா்களின் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை ராணுவத்தினா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில் தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்களின் உறவினா்கள் கோரிக்கை விடுத்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனா்.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையின்பேரில், கைது செய்யப்பட்ட 27 மீனவா்களும், இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதன்கிழமை இரவு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனா். அவா்களை தமிழ்நாடு மீன்வளத் துறை அதிகாரிகள் வரவேற்று, தமிழக அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகனங்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைத்தனா்.

கரூா் வைஸ்யா வங்கியின் 6 புதிய கிளைகள் திறப்பு

முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் ஆறு புதிய கிளைகளை தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் திறந்துள்ளது. இதுகுறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறி... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதியப் பாகுபாடு: வழக்கில் ஒருவார கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்னிந்திய ச... மேலும் பார்க்க

சென்னை - தாம்பரம் இடையே 2 ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் இன்று (பிப். 27) இரவு 2 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.நடிகை விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம்: முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் பிரநிதித்துவம் தரப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டத் திருத... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 27) திறந்து வைத்தார்.இப்புதிய மர... மேலும் பார்க்க