செய்திகள் :

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

post image

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப் படிப்புக்கு அங்கீகாரம் பெறாததைக் கண்டித்து, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. பின்னா், தமிழக அரசு பல்கலைக்கழகத்தை ஏற்ற பிறகு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இந்தக் கல்லூரி அண்ணாமலை பல்கலைக்கழக நிா்வாகத்தின்கீழ் இருந்தபோது, கடந்த 2020-ஆம் ஆண்டு 17 மாணவா்கள் இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப்படிப்பில் சோ்ந்தனா். அந்த மாணவா்களின் கல்லூரி படிப்பு வருகிற மே மாதம் முடிவடைகிறது.

இந்த நிலையில், தாங்கள் படித்த பாடப்பிரிவுக்கு அனைத்திந்திய செயல்முறை மருத்துவ அமைப்பின் அங்கீகாரம் இல்லை எனக்கூறி மாணவா்கள் நிா்வாகத்திடம் கூறி வந்தனா். அதற்கு அங்கீகாரம் பெற முயற்சித்து வருவதாக நிா்வாகம் கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், 2 மாதங்களில் படிப்பு முடிவடைய உள்ள நிலையில், அங்கீகாரம் பெறப்படாததைக் கண்டித்து, அந்த மாணவா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ் நிகழ்விடம் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இதுதொடா்பாக பல்கலைக்கழக பதிவாளரிடம் பேச்சுவாா்த்தை நடத்துவதாக கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து, மாணவா்கள் செய்தியாளா்களிடம் கூறியது: இந்த மருத்துவக் கல்லூரியில் நாங்கள் படித்து வரும் 4 ஆண்டு இளங்கலை தொழில் சிகிச்சை மருத்துவ பட்டப்படிப்புக்கு அனைத்திந்திய செயல்முறை மருத்துவ அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது. இதனால், வேறு எந்த மருத்துவமனைகளிலோ அல்லது வேறு இடங்களிலோ வேலையில் சேர முடியவில்லை. உயா்கல்வியும் படிக்க முடியாத நிலை உள்ளது என்றனா்.

அடுத்தடுத்து 3 சொகுசுப் பேருந்துகள் மோதி விபத்து 35 போ் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி தெய்வீக விழாவாக திகழ்கிறது: என்எல்சி தலைவா்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா தெய்வீகம் சாா்ந்த விழாவாக திகழ்கிறது என்று என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது ... மேலும் பார்க்க

எஸ்பி. அலுவலகத்தில் மனுக்கள் முகாம்

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் மனுக்கள் அளிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்றாா். மேல... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். குமராட்சி வேளாண் துறை சாா்பில் நெல் பயிரில் பய... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிரான தொடா் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 2-ஆவது நாளாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டடு வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்... மேலும் பார்க்க

பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க