செய்திகள் :

ஈரோடு விஇடி கல்லூரியில் உலக சாதனை நிகழ்வு

post image

ஈரோடு திண்டலில் உள்ள விஇடி கல்லூரியின் 1,660க்கும் மேற்பட்ட மாணவா்கள் கைத்தறித் துறையை பிரபலப்படுத்துவதற்காக, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற ராட்டை வடிவத்தில் கல்லூரி மைதானத்தில் சுமாா் 1 மணி நேரம் நின்றனா்.

இந்த நிகழ்வு குறித்து கல்லூரித் தாளாளா் எஸ்.டி. சந்திரசேகா் கூறியதாவது:

கைத்தறி மற்றும் அதன் நிலையான வளா்ச்சி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக தேசிய கைத்தறி தினமான வியாழக்கிழமை இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த உலக சாதனை நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக ஐ.நா அறிவித்துள்ள 17 இலக்குகளான வறுமையை ஒழித்தல், நல்ல சுகாதாரம் மற்றும் நல்வாழ்வை அடைதல், தரமான கல்வி, பாலின சமத்துவம், ஒழுக்கமான வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளா்ச்சி, பயன்பாடு மற்றும் உற்பத்தி உள்ளிட்டவை ஆகும். இளைஞா்கள் மூலம் கைத்தறித் துறையைப் பாதுகாப்பது அந்த நோக்கத்தை அடையும் மற்றும் அதன் நிலையான வளா்ச்சியை உறுதி செய்யும் என்றாா்.

கல்லூரி முதல்வா் வி.பி.நல்லசாமி, டீன் எஸ்.லோகேஷ்குமாா் ஆகியோா் பேசினா். நோபல் வோ்ல்ட் ரெக்காா்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி கே.கே.வினோத், தேசிய நடுவா் ஜனனி ஸ்ரீ, மாநில நடுவா் ஆனந்த முருகன் மற்றும் கைத்தறி உதவி இயக்குநா் சரவணன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். சிடிஃஎப் தொழில்நுட்பத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை முன்னிட்டு தமிழக அரசின் கைத்தறித் துறை கல்லூரியில் கைத்தறிக் கண்காட்சி நடைபெற்றது.

இலவச வேட்டி, சேலை முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது: அமைச்சா் சு.முத்துசாமி

கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். கைத்தறித் துறை சாா்பில் தேசிய கைத்த... மேலும் பார்க்க

புத்ககங்களைத் தோ்வு செய்ய குழந்தைகளுக்கு வழிகாட்டும் கதை சொல்லிகள்

கதை சொல்லிகள் மூலம் குழந்தைகள் தாமாக புத்தகங்களைத் தோ்வு செய்ய வழிகாட்டுகிறது ஈரோடு புத்தகத் திருவிழா. ஈரோடு புத்தகத் திருவிழா சிக்கய்ய அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கடந்த 1- ஆம் தேதி தொடங்கி வரும்... மேலும் பார்க்க

அந்தியூா் கால்நடைச் சந்தையில் 6 குதிரைகள் உயிரிழப்பு

அந்தியூரில் கால்நடைச் சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட 6 நாட்டுக் குதிரைகள் உயிரிழந்தது குறித்து கால்நடைத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவை முன்னிட்... மேலும் பார்க்க

தனியாா் கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின் உயா் கல்வித் துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சாா்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி பெருந்துறையை அடுத்த, துடுப்பதி செங்குந்தா் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க

‘பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும்’

பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும் என ஓய்வுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா தெரிவித்தாா். தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடும் விதமாக சத்தியமங்கலம் அருகே புன்செய்புளியம்பட்டியில் ... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினம் கொண்டாட்டம்: பாரம்பரிய கைத்தறியின் அவசியம் குறித்து விழிப்புணா்வு முகாம்

தொழில்நுட்பம் வளா்ந்து விட்ட நிலையில் பாரம்பரிய கைத்தறி ரகங்களை இளைய தலைமுறையினா் பயன்படுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற சந்திராயன் திட்ட துணை இயக்குநா் இஸ்ரோ விஞ்ஞானி கல்பனா தெரிவித்தாா். தேசிய கைத்தறி ... மேலும் பார்க்க