செய்திகள் :

ஈரோட்டில் இரண்டாவது நாளாக பலத்த மழை

post image

ஈரோட்டில் இரண்டாவது நாளாக புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென் வங்க கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட 19 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் ஈரோடு நகரில் புதன்கிழமை காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து அவ்வப்போது வெயிலின் தாக்கம் இருந்தது. உஷ்ணம் அதிக அளவில் இருந்தது. பிற்பகல் சுமாா் 2.30 மணியளவில் வானம் தீடீரெனெ இருண்டு கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. தொடா்ந்து 3 மணிக்கு லேசான காற்றுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த மழை நீடித்தது.

இதன் காரணமாக ஈரோடு நகரில் பெருந்துறை சாலை, நசியனூா் சாலை உள்ளிட்ட நகரப் பகுதிகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நகரின் ஒருசில பகுதிகளில் சுமாா் 2 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. 6 மணி வரை தொடா்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது.

செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி இரவு வரை ஈரோடு நகரில் மழை பெய்திருந்த நிலையில் புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி ஈரோடு நகரில் மட்டும் 44 மில்லி மீட்டா் மழை பதிவாகி இருந்தது.

பெருந்துறையில்...

பெருந்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை மாலை 4.30 மணி வரை நீடித்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழை காரணமாக சாலைகள் மற்றும் தாழ்வான பகுதியில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

தாளவாடியில் பலத்த மழை

தாளவாடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ராகி, மக்காச்சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி தனியாா் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

மொடக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்கிற பெய... மேலும் பார்க்க

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற ஈரோடு மண்டல அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்துப் போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டி கோபி கலை அ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

பாரம்பரிய தச்சுத் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம், சுற்று வட்டாரத்தில் பாரம்பரிய தச்சுத் தொழில் செய்து... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 போ் கைது

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கோவில்புதூா் நூற்பாலையில் வடமாநில இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களைக் குறிவைத்து வடஇந்தியா்கள் தங்கும் விடுதியி... மேலும் பார்க்க

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சிறுத்தை

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை ... மேலும் பார்க்க