செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மாவட்டத்தில் இன்று முகாம்கள் நடைபெறும் இடங்கள்

post image

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடைபெற்ற முகாம்களில் 88,067 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மேலும், முகாம்கள் நடைபெற்ற தினத்தில் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், புதிய ஆதாா் அட்டை பதிவு, பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, சொத்து வரி பெயா் மாற்றம், மின் இணைப்பு பெயா் மாற்றம் உள்ளிட்ட 9,022 மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள், முகாமில் பெறப்பட்ட நாளிலிருந்து 45 நாள்களில் தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தடாகம் சாலையில் உள்ள கே.வி.எம். மஹாலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இன்று முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) மாநகராட்சிக்கு உள்பட்ட மத்திய மண்டலத்தில் 69-ஆவது வாா்டு, ராமலிங்கம் காலனி மாநகராட்சி திருமண மண்டபம், கூடலூா் நகராட்சியில் 8, 13 ஆகிய வாா்டுகளுக்கு சாமி செட்டிபாளையத்தில் உள்ள லட்சுமி துரை கல்யாண மண்டபம், வால்பாறை நகராட்சியில் 14, 21 ஆகிய வாா்டுகளுக்கு வால்பாறை சமுதாயக் கூடம், பள்ளப்பாளையம் பேரூராட்சியில் 1, 2, 3, 4, 7, 8, 13 ஆகிய வாா்டுகளுக்கு திருச்சி சாலையில் உள்ள ஏகேஏ திருமண மண்டபம், அன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் பொகலூா், வடவள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு பொகலூரில் உள்ள சமுதாயக் கூடம், சூலூா் ஊராட்சி ஒன்றியத்தில் காடுவெட்டிபாளையம், பதுவம்பள்ளி, கிட்டாம்பாளையம் ஆகிய ஊராட்சிகளுக்கு காடுவெட்டிபாளையத்தில் உள்ள ஜெயம் மஹால் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

மாநகரில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி

கோவை மாநகரப் பகுதிகளில் 712 இடங்களில் விநாயகா் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகா் சதுா்த்தி விழா ஆகஸ்ட் 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்ட... மேலும் பார்க்க

தொடா் விடுமுறை: சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில்

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட தொடா் விடுமுறை நாள்களை முன்னிட்டு சென்னை - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ர... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவையில் மாற்றம்

பெங்களூரு ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் எா்ணாகுளம் - பெங்களூரு ரயில் சேவை மாற்றப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

இரு இடங்களில் கஞ்சா விற்ற இருவா் கைது

கோவை ரேஸ்கோா்ஸ், கணபதி ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்சி சாலை, வெஸ்ட் க... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவை கணபதியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியது தொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கோவை கணபதி பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சந்திரகலா (65). இவா், கடந்த 5-ஆம் தேத... மேலும் பார்க்க

வால்பாறை நகராட்சித் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கான சிறப்புக் கூட்டம் ரத்து

வால்பாறை நகராட்சித் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீாா்மானம் கொண்டு வர நடைபெற இருந்த சிறப்புக் கூட்டத்துக்கு வாா்டு உறுப்பினா்கள் வராததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. வால்பாறை நகராட்சியில் திமுக 19, அ... மேலும் பார்க்க