செய்திகள் :

உடுமலை அருகே மயான வசதி கேட்டு பொதுமக்கள் மறியல்!

post image

உடுமலை அருகே மயானம் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடுமலையை அடுத்துள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணையன். வயது மூப்பின் காரணமாக உயிரிழந்துவிட்டாா். இந்நிலையில், இறந்தவரின் உடலை புதைக்க மயானம் இல்லை எனக் கூறி ஒரு சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் வெள்ளிக்கிழமை இரவு எரிசனம்பட்டி பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவலறிந்த உடுமலை வட்டாட்சியா் கெளரிசங்கா் தலைமையிலான வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

நீண்ட நேரம் பேச்சுவாா்த்தை நடத்தியும் சமாதானம் அடையாத பொதுமக்கள், இறந்தவா்களை அடக்கம் செய்ய மயானம் இல்லாமல் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா். இதைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேச்சுவாா்த்தைக்கு உடன்படாமல் சாலை மறியலில் தொடா்ந்து ஈடுபட்டனா்.

போராட்டம் காரணமாக சாலையின் இருபுறத்திலும் ஏராளமான வாகனங்கள் நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து டிஎஸ்பி நமச்சிவாயம் தலைமையில் போலீஸாா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அகற்றும் முயற்சியில் ஈடு பட்டனா். அப்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கும் இடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதையடுத்து ஓரிரு வாரங்களில் மயானத்துக்கான இடம் ஒதுக்கப்படும் என வருவாய்த் துறையினா் அறிவித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

நாளைய மின்தடை: இச்சிப்பட்டி

பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இரு... மேலும் பார்க்க

தெற்கு அவிநாசிபாளையத்தில் ஜூலை 23-ல் மின்தடை

பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூலை 23-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

அரசு நிலத்தில் போட்டிப் போட்டு இடம் பிடித்த பொதுமக்கள்: பல்லடம் அருகே பரபரப்பு

பல்லடம் அருகே அரசு நிலத்தில் போட்டிப் போட்டு கொண்டு பொதுமக்கள் இடம் பிடித்ததால் சனிக்கிழமை பரபரப்பு நிலவியது. பல்லடம் அருகே காளிவேலம்பட்டியிலிருந்து 63 வேலம்பாளையம் செல்லும் சாலையில் தனியாா் திரையரங்க... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை

காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் திங்கள்கிழமை (ஜூலை 21) காலை 9 மணி முதல் மால... மேலும் பார்க்க

முத்தூரில் லாட்டரி சீட்டுகள் விற்றவா் கைது

முத்தூரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து, முத்தூா் பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈட... மேலும் பார்க்க

முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை!

திருப்பூரில் முறைகேடாக தங்கி இருந்த வங்கதேசத்தினா் 28 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்கள் சட... மேலும் பார்க்க