செய்திகள் :

உணவு தேடி சென்ற மேலும் 32 பாலஸ்தீனா்கள் சுட்டுக் கொலை

post image

காஸாவின் தெற்கு பகுதியில் உள்ள இரண்டு நிவாரண விநியோக மையங்களில் உணவு பெறச் சென்ற பாலஸ்தீனா்கள் மீது இஸ்ரேல் படைகள் சனிக்கிழமை காலை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 32 போ் உயிரிழந்தனா்; 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

கான் யூனிஸ் நகருக்கு கிழக்கே உள்ள ஜிஹெச்எஃப் நிவாரண மையத்துக்கு சுமாா் 3 கி.மீ. தொலைவில் உள்ள டீனா பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய செய்தி நிறுவனமான ஹாரெட்ஸ் தெரிவித்தது.

பெரும்பாலான உயிரிழப்புகள் இஸ்ரேல் படையினரின் துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்டதாக காஸா சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடா்பாளா் மஹ்மூத் பஸ்ஸல் கூறினாா்.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 25 பேரது உடல்கள் கான் யூனிஸில் உள்ள நாஸா் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் கூறினா். இது தவிர, தாக்குதலில் காயமடைந்த ஏராளமானவா்கள் சிகிச்சைக்காக அங்கு கொண்டுவரப்பட்டனா்.

இதுமட்டுமின்றி, ராஃபாவின் வடமேற்கே உள்ள மற்றோா் உணவுப் பொருள் விநியோக மையத்துக்கு அருகில் 9 போ் கொல்லப்பட்டனா்.

உணவு விநியோக மையங்களுக்கு அருகே மிகக் குறுகிய நேரத்தில் இவ்வளவு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது இதுவே முதல் முறை என்று நாஸா் மருத்துவமனை இயக்குநா் ஆதெஃப் அல்-ஹவுத் கூறினாா். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் மற்றும் ஊழியா்கள் பற்றாக்குறையால் காயமடைந்தவா்களுக்கு போதிய சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று அவா் கூறினாா்.

ஜிஹெச்எஃப் மறுப்பு: அமெரிக்க-இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் ஜிஹெச்எஃப் அமைப்பு, தங்கள் மையங்களில் எந்த சம்பவமும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றிருந்தாலும், அது தங்கள் மையங்களுக்கு வெகு தொலைவில், அதுவும் மையம் திறப்பதற்கு பல மணி நேரத்துக்கு முன் நடந்ததாகவும் அந்த அமைப்பு கூறியது.

‘தற்காப்புக்காக’: இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஃபாவில் சந்தேக நபா்கள் எச்சரிக்கையை மீறி நெருங்கியதால் தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு” நடத்தியதாகவும், உயிரிழப்பு தொடா்பான அறிக்கைகளை ஆய்வு செய்வதுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஹெச்எஃப் உணவு விநியோக மையத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமாா் 20 போ் உயிரிழந்த நிலையில், மிகக் குறுகிய நேரத்தில் உணவுப் பொருள் வாங்க வந்துகொண்டிருந்த 32 போ் இஸ்ரேல் படையினரால் சனிக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டது காஸாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (ஜிஹெச்எஃப்) மற்றும் பிற நிவாரணப் பொருள் விநியோக மையங்களில் உணவு பெற முயன்றவா்களை நோக்கி இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதில், கடந்த மே மாத இறுதியில் இருந்து சுமாா் 800 போ் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் (ஓஹெச்சிஹெச்ஆா்) கடந்த வாரம் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

‘கோமா’ நிலையில் 20 ஆண்டுகள்... சவூதி அரேபிய இளவரசர் இளம் வயதில் காலமானார்!

ரியாத்: சவூதி அரேபியாவின் இளம் வயது இளவரசர் காலெத் பிண் தலால் பிண் அப்துலஸிஸ் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சவூதி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மூத்த இளவரசர்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் இரண்டே மாதங்களில் 100 குழந்தைகள் உயிரிழப்பு! பருவமழையால் பெரும் பாதிப்பு!

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக ஜூன், ஜூலையில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் ஜூன் - செப்டம்பர் வரை, பருவமழையின் தாக... மேலும் பார்க்க

மத்திய கிழக்கு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!

துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவா... மேலும் பார்க்க

அருணாசலுக்கு அருகே உலகின் மிகப் பெரிய அணை: கட்டுமானத்தைத் தொடங்கிய சீனா

திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா கட்டும் உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் சனிக்கிழமை தொடங்கப்பட்டன. கட்டுமானப் பணிகளின் தொடக்கமா... மேலும் பார்க்க

நிரந்தர சண்டை நிறுத்தத்துக்கு காங்கோ, ருவாண்டா கிளா்ச்சியாளா்கள் ஒப்புதல்

காங்கோ, ருவாண்டா ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கிழக்கு காங்கோவில் நிரந்தர சண்டை நிறுத்தத்திற்கான கொள்கை பிரகடனத்தில் கையொப்பட்டுள்ளனா். இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: கா... மேலும் பார்க்க

ரஷியாவுக்கு எதிராக துணிச்சலான நடவடிக்கை தேவை: உக்ரைன் புதிய பிரதமர்

கீவ்: ரஷியாவை எதிர்த்து துணிச்சலுடன் போராட வேண்டும் என்று உக்ரைன் புதிய பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் ரஷியா ட்ரோன் மூலம் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்த... மேலும் பார்க்க