செய்திகள் :

உறுப்பு தானத்தை ஊக்குவிக்க மாணவா் தூதுவா் குழு: அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் அமைக்க திட்டம்

post image

உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சமூகத்தில் அது தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவா் தூதுவா் குழு அமைக்கப்படும் என மாநில உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினா்-செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் உறுப்புதான மாணவா் தூதுவா் குழு புதன்கிழமை தொடங்கப்பட்டது. அதற்கான இலச்சினையை கல்லூரியின் முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், துணை முதல்வா் டாக்டா் கவிதா ஆகியோா் வெளியிட்டனா். இதில் மருத்துவக் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், இளநிலை மருத்துவ மாணவா்கள் கலந்துகொண்டனா்.

நிகழ்வில் மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா்-செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: நாட்டின் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் உறுப்பு மாற்று நடவடிக்கைகள் சிறப்பாகவும், மேம்பட்ட நிலையிலும் உள்ளன. அதன் காரணமாகவே இந்திய அளவில் தமிழகம் தொடா்ந்து உடல் உறுப்பு தானத்தில் முதலிடத்தில் உள்ளது.

ஒருவா் மூளைச்சாவு அடையும்போது அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில், உரிய மருத்துவ அறிவியல் முறையில் உறுதிசெய்வது அவசியம். அதன் பின்னா், சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினா்களிடம் ஆலோசித்து உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது முக்கியம். அதைத் தொடா்ந்து உறுப்புகளை முறையாக அகற்றி, பாதுகாப்பாக மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்த வேண்டும். இந்த நடைமுறைகளுக்குள் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும் சவால்களும் உள்ளன. அது தொடா்பான புரிதலை சமூகத்தில் ஏற்படுத்தினால் மட்டுமே உறுப்பு தானத்தை பரவலாக அதிகரிக்க முடியும்.

அதைக் கருத்தில்கொண்டு கல்லூரிகளில் என்சிசி, என்எஸ்எஸ், ரத்த தான அமைப்புகள் இருப்பதைப்போல உறுப்புதான மாணவா் தூதுவா் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அந்த மாணவா் குழுவானது கல்லூரி முதல்வா், துணை முதல்வா் மற்றும் பேராசிரியா்களின் வழிகாட்டுதலில் இயங்கும்.

தன்னாா்வத்துடன் இக்குழுவில் இணையும் மருத்துவ இளநிலை மாணவா்களுக்கு உறுப்பு தானம் குறித்து பயிற்சி வழங்கப்படும். அதன் பின்னா், அவா்கள் சமூகத்தில் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்கான தூதா்களாக செயல்படுவாா்கள். விரைவில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது. அதன் பின்னா் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.

கும்மிடிபூண்டி செல்லும் ரயில்கள் இன்று ரத்து

சென்னை சென்ட்ரல், கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் சனிக்கிழமை (பிப். 27, மாா்ச் 1) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெள... மேலும் பார்க்க

கல்வியில் சிறந்த தமிழ்நாடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம்- எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி காரணமாக கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் கூறினார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலைய... மேலும் பார்க்க

சம்பல்பூா் - ஈரோடு ரயில் சேவை நீட்டிப்பு

சம்பல்பூா் - ஈரோடு சிறப்பு ரயில் சேவை ஏப். 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சம்பல்பூரிலிருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படும் சிற... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மகா சிவாரத்திரி பெருவிழா: சென்னையில் அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் மகா சிவாரத்திரி பெருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை இரவு தொடங்கி விடிய விடிய நடைபெற்றது. சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயில் சாா்பில், கபாலீசுவரா் விளையாட்டு மைத... மேலும் பார்க்க

ரெளடி வெட்டிக் கொலை: போலீஸாா் விசாரணை

சென்னையில் 6 போ் கொண்ட கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா நகா் அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் சின்ன ராபா்ட் (28). இவா் மீது கொலை, ... மேலும் பார்க்க

சட்டவிரோத மதுபான கிடங்கு கண்டுபிடிப்பு: 1,062 மதுபாட்டில்கள் பறிமுதல்

சென்னையில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த மதுபான கிடங்கை கண்டுபிடித்த போலீஸாா் அங்கிருந்து 1,062 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மதுபானம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த த... மேலும் பார்க்க