செய்திகள் :

உற்பத்தியில் தன்னிறைவு பெறாதவரை ‘மேக் இன் இந்தியா’ சாத்தியமில்லை: ராகுல்

post image

‘நாடு உற்பத்தியில் தன்னிறைவை அடையாதவரை மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ முன்னெடுப்பு வெறும் பேச்சளவில் மட்டுமே நீடிக்கும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ‘மேக் இன் இந்தியா (இந்தியாவில் தயாரிப்போம்)’ என்ற பெயரில் பொருள்களின் பாகங்களை ஒன்றிணைத்து முழுமையான பொருளாக மாற்றும் பணியைத்தான் நாம் செய்து வருகிறோம். உண்மையான உற்பத்தியை நாம் செய்யவில்லை. ஐபோன் முதல் தொலைக்காட்சிகள் வரையிலான பொருள்களின் உதிரிபாகங்கள் வெளிநாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்கு வருகின்றன. பெரும்பாலான தொலைக்காட்சிப் பெட்டிகளின் 80 சதவீத பாகங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த பாகங்களை ஒன்றிணைத்து முழுமையான பொருளாக மாற்றும் பணியை மட்டும்தான் இந்தியா செய்கிறது.

சிறிய தொழில்முனைவோா் பொருள்களை உற்பத்தி செய்ய விரும்புகின்றனா். ஆனால், அவா்களுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதில்லை என்பதோடு, அரசின் கொள்கையும் அவா்களுக்கு சாதகமாக இல்லை. ஒருபுறம் கடுமையான வரி விதிப்பு; மறுபுறம் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஏகபோகம் என்ற நிலைப்பாடு நமது தொழில்துறையைப் பற்றிக்கொண்டுள்ளது.

உற்பத்தியில் உண்மையான சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுக்க வேண்டுமெனில், இறக்குமதி செய்யப்படும் ஒன்றிணைக்கும் நிலையைக் கடந்து உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் கள அளவில் மாற்றம் தேவை. அப்போதுதான் சீனாவுடன் சம அளவில் நாம் போட்டி போட முடியும்.

அவ்வாறு, உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெறாதவரை, ‘வேலைவாய்ப்பு, வளா்ச்சி, மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட கருத்துகள் வெறும் பேச்சளவில் மட்டுமே நீடிக்கும் என்று குறிப்பிட்டாா்.

இந்தப் பதிவுடன், தில்லியை அடுத்த கிரேட்டா் நொய்டா பகுதியில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டி தயாரிப்பு நிறுவனத்துக்குச் சென்று, அங்குள்ள ஊழியா்களுடன் தான் கலந்துரையாடிய காணொலியையும் ராகுல் இணைத்துள்ளாா்.

அரசமைப்புச் சட்ட பதவியை தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல்: பாஜக குற்றச்சாட்டு

தனது குடும்பத்தினரின் குற்றங்களை மறைக்க தான் வகிக்கும் அரசமைப்புச் சட்ட பதவியை (மக்களவை எதிா்க்கட்சித் தலைவா்) தவறாகப் பயன்படுத்துகிறாா் ராகுல் காந்தி என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. ஹரியாணாவில் நில ... மேலும் பார்க்க

2027-க்குள் 3-ஆவது பெரும் பொருளாதார நாடாக இந்தியா: அமித் ஷா உறுதி

வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் உலகில் பெரும் பொருளாதார மதிப்பு கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா 3-ஆவது இடத்துக்கு முன்னேறும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். கடந்த 2023-ஆம் ஆண்டு உத்த... மேலும் பார்க்க

ரூ.3.44 லட்சம் கோடிக்கு இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா். தெலங்கானா... மேலும் பார்க்க

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் நிறுவனத்தின் அறிக்கை நம்பகமானதல்ல: டி.ஒய். சந்திரசூட்

வேதாந்தா குழுமம் குறித்த வைஸ்ராய் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் நம்பகத்தன்மை இல்லை என்று முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளாா். அமெரிக்காவில் உள்ள வைஸ்ராய் நிதி... மேலும் பார்க்க

பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்: 8 புதிய மசோதாக்கள்

பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கவுள்ளது. ஆபரேஷன் சிந்தூா், அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் கருத்துகள், அகமதாபாத் விமான விபத்து, பிகாா் வாக்காளா் பட... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவரின் கேள்விகள்: ஜூலை 22-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால நிா்ணயம் செய்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடா்பாக குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு எழுப்பிய 14 முக்கியக் கேள்விகள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜூலை... மேலும் பார்க்க