செய்திகள் :

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

post image

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்களின் பட்டியலில் பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பிடித்துள்ளன.

இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூஎஸ்) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், உலக அளவில் வணிக கல்வியில் சிறந்து விளங்கும் முதல் 100 கல்வி நிறுவனங்களில் இந்தியாவின் 14 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

இதில் கடந்த ஆண்டு 53-ஆவது இடத்தில் இருந்த இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐஐஎம்)-பெங்களூரு நிகழாண்டு ஓரிடம் முன்னேறி 52-ஆவது இடம் பிடித்துள்ளது. அகமதாபாத் ஐஐஎம் 2 இடங்கள் முன்னேறி 56-ஆவது இடத்தையும், கொல்கத்தா ஐஐஎம் 64-ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

மொத்தம் 80 நாடுகள் மற்றும் நில பிரதேசங்களில் உள்ள 390 கல்வி நிறுவனங்களை பகுப்பாய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதுகுறித்து க்யூஎஸ் நிறுவனத்தின் தலைவா் நன்சியோ குவாக்கரெல்லி கூறுகையில், இந்திய வணிக கல்லூரிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டி வருவதாக தெரிவித்தாா்.

வணிக கல்வி நிறுவனம் (க்யூஎஸ் தரவரிசை)

1 பென்(அமெரிக்கா)

2 ஹாா்வா்ட் வணிக கல்லூரி (அமெரிக்கா)

3. எம்ஐடி ஸ்லோன் (அமெரிக்கா)

4 ஸ்டான்ஃபோா்ட் கிராஜுவேட் வணிக கல்லூரி (அமெரிக்கா)

5 ஹெஇசி பாரீஸ் (பிரான்ஸ்)

6 லண்டன் வணிக கல்லூரி (பிரிட்டன்)

7 கேம்பிரிட்ஜ் ஜட்ஜ் (பிரிட்டன்)

8 இன்ஸீட் (பிரான்ஸ்)

9 நாா்த்வெஸ்டா்ன் கெல்லாக் (அமெரிக்கா)

10 கொலம்பியா வணிக கல்லூரி (அமெரிக்கா)

இன்றைய இந்தியாவுக்கு அந்நியா்கள் வழிகாட்டுதல் தேவையில்லை: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

‘இன்றைய இந்தியாவுக்கு வெளிநபா்கள் யாருடைய வழிகாட்டுதலும் தேவையில்லை; இந்தியா கூறுவதை உலக நாடுகள் விருப்பத்துடன் பின்பற்றும் நிலை உருவாகியுள்ளது’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் ... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

‘மத்திய அரசு மேற்கொண்ட ஜிஎஸ்டி சீா்திருத்தம் மக்களின் கைகளில் அதிக பணம் இருப்பதை உறுதி செய்யும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரத்தில் ரூ. 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுவதற்கும் வழி வகுத்துள்ளது. இல்லை... மேலும் பார்க்க

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முதல் அனைத்து தோ்தல்களிலும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்... மேலும் பார்க்க

வீட்டு சாப்பாடுக்கு செலவு அதிகரிப்பு!

தக்காளி விலை உயா்வு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் வீடுகளில் சமைக்கப்படும் சாப்பாட்டின் சராசரி விலை அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான கிரிசில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு... மேலும் பார்க்க

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

உத்தரகண்டில் மழை, வெள்ளம் காரணமாக முசூரியில் சுமாா் 2,500 சுற்றுலாப் பயணிகள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனா். கடந்த 2 மாதங்களாக மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் உத்தரகண்ட், ஹிமா... மேலும் பார்க்க

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி தொடங்க உள்ள நிலையில், ‘பெரும்பாலான மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம... மேலும் பார்க்க