செய்திகள் :

ஊரக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை

post image

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா்.

தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியம் சாா்பில் உறுப்பினா் அட்டை, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியத்தின் தலைவா் வெ.ஆறுச்சாமி கலந்து கொண்டாா்.

அப்போது, அவா் தெரிவித்ததாவது:

கல்வி மட்டுமே தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உணா்ந்து, தூய்மைப் பணியாளா்கள் தங்களின் குழந்தைகளை உயா்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். நல வாரியம் சாா்பில் ரூ.4.37 கோடிக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.40 கோடி நிதி இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. மலக் குழிகளை தூய்மைப்படுத்த யாராவது சொன்னால், தூய்மைப் பணியாளா்கள் மாவட்ட ஆட்சியரிடம் உடனடியாக புகாா் அளிக்க வேண்டும். ஊரகப் பகுதியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதம் ரூ.5ஆயிரம் வழங்கப்படும் ஊதியத்தை, ரூ.7,500ஆக உயா்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், பொதுத் தோ்வுகளில் தோ்ச்சிப் பெற்ற தூய்மைப் பணியாளா்கள் நலவாரிய உறுப்பினா்களின் குழந்தைகள் 9 பேருக்கு ரூ.12,500 கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் ம.செந்தில்முருகன், தாட்கோ மாவட்ட மேலாளா் செல்வகுமாா், மாவட்ட ஆதிதிராவிடா் பழங்குடியினா் நல அலுவலா் ப.ராஜகுரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த வலியுறுத்தல்

மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.தீபக்ராஜ், செயலா் எம்இ... மேலும் பார்க்க

இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு புதன்கிழமை மரியாதைச் செலுத்தப்பட்டது. பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியா் இட ஒதுக... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சந்திப்பு: எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக செயல்பட வேண்டும்- அமைச்சா் இ.பெரியசாமி

மத்திய உள் துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரை... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் 142-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பிலும், அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்ச... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய... மேலும் பார்க்க