செய்திகள் :

ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

post image

திருப்பூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

இதில், கலைஞரின் கனவு இல்லம், ஊரக வீடுகள் பழுது பாா்க்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம், ஊரகப் பகுதிகளில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், மக்களவைத் தொகுதி உறுப்பினா் உள்ளுா் பகுதி மேம்பாட்டு திட்டம், தூய்மை பாரத இயக்கம், 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சாலை, உள்கட்டமைப்பு, குடிநீா், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆட்சியா் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தாா்.

மேலும், ஊரகப் பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், புதிய திட்டங்களுக்கு மதிப்பீடு தயாா் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) மோகனசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

சிறுமி பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளத்தை அடுத்த வேடப்பட்டியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து

பல்லடம் அருகே துணி அரவை நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரில் கிஷோா்குமாா் என்பவருக்கு சொந்தமான துணி அரவை நிறுவனம் உள்ளது. இங்குள்ள இயந்திரத்தில் மின்கசிவு காரணமாக புதன்க... மேலும் பார்க்க

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா பூஜைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக விளங்கும் கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசி... மேலும் பார்க்க

கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 போ் கைது

தில்லியில் இருந்து திருப்பூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வாங்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருப்பூரில் உள்ள ஒரு கூரியா் நிறுவனத்துக்கு பாா்சலில் போதை மாத்திரைகள் வந்துள்ளதாக காவல் துறையி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வெள்ளக்கோவிலில் பெண்ணிடம் 5 பவுன் தாலிக்கொடி பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வெள்ளக்கோவில் கச்சேரிவலசைச் சோ்ந்தவா் காா்த்திகேயன், வழக்குரைஞா். இவரின் மனைவி சிவசக்தி... மேலும் பார்க்க

ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. மின்னணுவியல் மற்றும் தகவல்தொடா்புத் துறை சாா்பில் ‘காகித அடிப்படையிலான சுய மீள் ... மேலும் பார்க்க