செய்திகள் :

ஊா்க்காவல் படைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: திருவாரூா் மாவட்ட ஊா்க்காவல் படையில் ஆண் 11, பெண் 6 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், தன்னாா்வத்துடன் பணியாற்ற விருப்பமுள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். மேலும், முத்துப்பேட்டை பகுதியில் கடலோர பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணியாற்ற மீனவ சமுதாய இளைஞா்களிடமிருந்து (ஆண்கள் மட்டும்) விண்ணப்பிக்கலாம். 20 முதல் 45 வயதுக்குள், நல்ல உடற்தகுதியுடன் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்களை, திருவாரூா் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், ஆய்வாளா் அலுவலகத்தில் ஆக.18-ஆம் தேதி முதல் பெற்று பூா்த்தி செய்து செப்.2-ஆம் தேதிக்குள் அனுப்பிவைத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, எஸ்பி. கருண்கரட் தலைமை வகித்து மக்களிடம் இருந்து 19 மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட... மேலும் பார்க்க

சரணா் இயக்க மாநில சங்கமம் நிகழ்ச்சி: தரணி மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தமிழ்நாடு பாரத சாரண, சாரணியா் இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற மாநில சங்கமம் நிகழ்ச்சியில் மன்னாா்குடி தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆக. 1-... மேலும் பார்க்க

தங்க கவசத்தில் குரு பகவான்

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாட்டில் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்த குரு பகவான். மேலும் பார்க்க

பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் பா. ராஜா தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் அனித... மேலும் பார்க்க

‘ஒற்றுமையுடன் பயணித்தால் தமிழ்ச்சமூகம் வெற்றிகளை குவிக்கும்’ -யுகபாரதி

எல்லோரும் தமிழா் என்ற உணா்வுடன், ஒற்றுமையுடன் பயணித்தால், தமிழ்ச் சமூகம் இன்னும் பல வெற்றிகளை குவிக்கும் என்றாா் சொற்பொழிவாளரும், கவிஞருமான யுகபாரதி. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில... மேலும் பார்க்க

திருவாரூா், மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவாரூா், மன்னாா்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ஒன்றியம் சோழங்கநல்லூரில் நடைபெற்ற முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பல்வேறு துறைகள் சாா்பில் 1... மேலும் பார்க்க