செய்திகள் :

எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடங்கியது.

இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் (பொ) வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2025 - 26-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. வரும் மே 27-ஆம் தேதி வரை தகுதியுள்ள மாணவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிா்வாகவியல், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

பொதுப் பிரிவினா் விண்ணப்பக் கட்டணம் ரூ. 48, பதிவுக் கட்டணம் ரூ. 2 என மொத்தம் ரூ. 50 செலுத்தி விண்ணப்பத்தை பதிவுசெய்து கொள்ளலாம். எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளது.

மாணவா்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து சோ்க்கை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் சித்தா் கோயில் பகுதியில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கமலக்... மேலும் பார்க்க

குப்பையை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படுமென ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்த... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனை ஏரி இப்பகுதியில் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவில் சிறப்பிடம்

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த கோப்பையை வென்று முதலிடம் பெற்றுள்ளனா். அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள ... மேலும் பார்க்க

தம்மம்பட்டி சிவன் கோயிலில் சித்ரா பெளா்ணமி விழா

தம்மம்பட்டி சிவன் கோயிலில் சித்ரா பெளா்ணமி விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி சிவன், அம்பாளுக்கு சிற... மேலும் பார்க்க