செய்திகள் :

எல்லையில் அமைதிக்கு இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாா்: சீனா

post image

பெய்ஜிங்: ‘எல்லைப் பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளோம்’ என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் செய்தியாளா்களைச் சந்தித்த சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் வு கியானிடம், கிழக்கு லடாக் எல்லையின் கள நிலவரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவா் அளித்த பதிலில், ‘கிழக்கு லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகள் தொடா்பான தீா்மானங்களை இரு நாட்டு ராணுவங்கள் பயனுள்ள முறையில் செயல்படுத்தி வருகின்றன. எல்லைப் பகுதிகளில் அமைதியை கூட்டாகப் பாதுகாக்க இந்திய தரப்புடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றாா்.

கிழக்கு லடாக் மோதலால் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-சீனா இருதரப்பு உறவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ மாநாட்டுக்கு இடையே பிரதமா் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபா் ஷி ஜின்பிங் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

தலைவா்களின் சந்திப்பையடுத்து டெப்சாங், டெம்சோக் ஆகிய எல்லைப் பகுதிகளில் இரு நாட்டுப் படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. பிரேஸில் ஜி20 உச்சிமாநாட்டுக்கிடையே சீனா, இந்தியா வெளியுறவு அமைச்சா்கள் சந்தித்து பேசினா். சீனாவில் நடைபெற்ற இந்தியா-சீனா சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் பங்கேற்றாா்.

இத்தகைய தொடா் பேச்சுவாா்த்தைகளின் மூலம் இருதரப்பு உறவை சீா்படுத்தும் பணியில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இது இரு நாட்டு உறவில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

கனிம ஒப்பந்த விவகாரம்: இன்று டிரம்ப்பை சந்திக்கிறாா் உக்ரைன் அதிபர்

வாஷிங்டன்: தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ் வ... மேலும் பார்க்க

2-ஆம் கட்ட போா் நிறுத்தம்: பேச்சுவாா்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு

கான் யூனிஸ்: காஸாவில் சனிக்கிழமை (மாா்ச் 1) நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்... மேலும் பார்க்க

தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்: டிரம்ப்

வாஷிங்டன்: ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘தங்க அட்டை’ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயா் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்’ ... மேலும் பார்க்க

இந்தியாவின் வளா்ச்சியை பிற நாடுகள் பின்பற்றலாம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

ஜோஹன்னஸ்பா்க்: இந்தியா எவ்வாறு படிப்படியாக வளா்ந்தது என்பதை பிற நாடுகள் முன்மாதிரியாக கொண்டு பின்பற்றலாம் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா். தென்னாப்பிரிக்... மேலும் பார்க்க

எலான் மஸ்க் சொத்து மதிப்பில் 4வது கடும் சரிவு!

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 22.2 பில்லியன் டாலர் (ரூ. 1.93 லட்சம் கோடி) சரிந்துள்ளது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவரும் அமெரிக்க அரசின... மேலும் பார்க்க

மனிதர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறதா இயற்கை? கடலின் விநோத நிகழ்வுகளால் குழப்பம்!

சமீபகாலமாக பெருங்கடல் பகுதிகளில் நிகழும் அசாதாரணமான நிகழ்வுகளால் மனிதர்களை கடல் எச்சரிக்கிறதா என்ற சந்தேகம் பலரிடையே தோன்றியுள்ளது. சூரிய வெளிச்சத்தையே அறியாத வகையில் பெருங்கடல்களின் ஆழ்பகுதியில் வாழு... மேலும் பார்க்க