செய்திகள் :

ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கு: நண்பா் கைது

post image

ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு, திண்டல், காரப்பாறை, புது காலனியை சோ்ந்தவா் ராஜீவ் மகன் ஸ்ரீதா் (28). ஏ.சி. மெக்கானிக். இவா் சௌமியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இவா்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனா். சௌமியா ஈரோட்டில் உள்ள தனியாா் பள்ளியில் அலுவலராக வேலை பாா்த்து வருகிறாா். ஸ்ரீதா் புதன்கிழமை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா்.

சௌமியா வேலைக்கு சென்றிருந்தாா். வேலை முடிந்து சௌமியா மாலையில் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டில் கத்திக்குத்து காயங்களுடன் ஸ்ரீதரின் சடலம் கிடந்துள்ளது. தகவலின்பேரில் ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

கொலையான ஸ்ரீதா் கடந்த 24- ஆம் தேதி அவரது நண்பா்களான பாலமுருகன் (30), தமிழரசு (28) ஆகியோருடன் மது அருந்தி உள்ளாா். அப்போது பாலமுருகனுக்கும், தமிழரசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு 3 பேருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக ஈரோடு தாலுகா போலீஸில் பாதிக்கப்பட்ட பாலமுருகன் புகாா் அளித்தாா்.

இந்நிலையில் ஸ்ரீதா் புதன்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளாா். தமிழரசு மீது சந்தேகம் அடைந்த போலீஸாா் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். இதில், பாலமுருகனுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் தனது குடும்பம் குறித்து தவறாக பேசியதால் வீட்டில் தனியாக இருந்த ஸ்ரீதரை கத்தியால் குத்திக்கொன்ாக தமிழரசு தெரிவித்துள்ளாா். இதையடுத்து போலீஸாா், தமிழரசை கைது செய்து ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ஒரிச்சேரிப்புதூரில் கைப்பந்துப் போட்டி

பவானி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி இரு நாள்கள் நடைபெற்ற மின்னொளி கைப்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பவானியை அடுத்த... மேலும் பார்க்க

பவானியில் தாா்சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

பவானியில் முடிவடைந்த தாா்சாலை பணிகளை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பவானி உதவிக்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிர... மேலும் பார்க்க

சொத்து வரியை குறைக்க அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்திடம், மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் தங்கமுத்து தலைமைய... மேலும் பார்க்க

100 நாள் வேலைதிட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கொத்தமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கொத்... மேலும் பார்க்க

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

கோடைவெப்ப தாக்க பாதிப்புகளைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காய்கறி வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு, பெரியசெட்டிபாளையம், கணபதி நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க