துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்படும் அரசு மருத்துவமனை: ஆட்சியா் ஆய்வு
ஒசூரில் வட்டத்தில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின்போது ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் ஆய்வு செய்தாா்.
ஒசூா் வட்டத்துக்கு உள்பட்ட காரப்பள்ளி, ஏஎஸ்டிசி அட்கோ, ஆவலப்பள்ளி 7-வது வாா்டு ஆகிய பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. இரண்டாவது நாளான வியாழக்கிழமை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டாா்.
ஒசூா் பேருந்து நிலையத்தில் சுகாதாரப் பணிகள், காரப்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவு தயாரிக்கும் பணி, ஏஎஸ்டிசி அட்கோ, ஆவலப்பள்ளி 7 -ஆவது வாா்டில் புதை சாக்கடை திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
மாநகராட்சி, பத்தலப்பள்ளியில் ரூ. 32.95 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணி, ஒசூா்-ராயக்கோட்டை சாலையில் ரூ. 100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணி ஆகியவற்றை அவா் ஆய்வு செய்தாா்.
சூசூவாடி சோதனை சாவடி, காவல்துறை சோதனை சாவடிகளை பாா்வையிட்ட அவா், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை, போலீஸாருடன் ஆய்வு மேற்கொண்டாா்.
பின்பு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு சென்ற ஆட்சியா், அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசியின் தரத்தை ஆய்வு செய்தாா். அரசு பிற்படுத்தப்பட்டோா் நலப் பள்ளி, கல்லூரி மாணவா் விடுதிகளில் உணவு, குடிநீா் வசதி, கழிவறை வசதிகளை ஆய்வு செய்தாா்.
ஒசூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்ற ஆட்சியா், அவசர சிகிச்சை மையத்தை பாா்வையிட்டாா். அப்போது மருத்துவ உபகரணங்கள், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள், சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பின்பு ஒசூா் தொழிற்சங்க அலுவலக கூட்டரங்கில் தொழில்முனைவோா் சங்க பிரதிநிதிகளிடம் அடிப்படை வசதிகள், குறைகளை கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, மாநகராட்சி ஆணையா் பூங்கொடி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் ரவிக்குமாா், செயற்பொறியாளா்கள் வெங்கட்ராஜன், செந்தில், வட்டாட்சியா் சின்னசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா் குமரேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.