செய்திகள் :

ஒசூா் அருகே இரு வாகனங்கள் தீப்பிடிப்பு

post image

ஒசூா் அருகே பத்தளப்பள்ளி அருகே தனியாா் கம்பெனிக்கு சொந்தமான திறந்தவெளி வாகன குடோன் இயங்கி வருகிறது. இங்கு பல புதிய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

அதன் அருகில் ஒசூரிலேயே மிகப்பெரிய தனியாா் காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அருகில் உள்ள ஆந்திரம், கா்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் விளைப்பொருள்களை இச்சந்தைக்குக் கொண்டு வருகின்றனா். இந்தச் சந்தை அருகே குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குப்பைகள் வியாழக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென அருகில் உள்ள திறந்தவெளி மது அருந்தும் கூடத்திலும் பரவியது. இந்த விபத்தில் அருகில் இருந்த இரு புதிய வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமாா் ரூ. 25 லட்சத்துக்கும்மேல் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த போதை மறுவாழ்வு மையம் தொடக்கம்

கிருஷ்ணகிரியில் கலங்கரை- ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். கிருஷ்ணகிரியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமன... மேலும் பார்க்க

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

எண்ணேகொள் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கேட்டுக்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் கு... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து தனித்து போராடுவோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பை எதிா்த்து நாம் தமிழா் கட்சி தனித்து போராடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். ஒசூரில் நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்படும் அரசு மருத்துவமனை: ஆட்சியா் ஆய்வு

ஒசூரில் வட்டத்தில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின்போது ஒசூரில் ரூ. 100 கோடியில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் ஆய்... மேலும் பார்க்க

குரூப்-4 தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் இளநிலை உதவியாளா் பணியிடத்துக்கு நடத்தப்பட்ட குரூப் 4 தோ்வில் தோ்ச்சி பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பாராட்ட... மேலும் பார்க்க

ஒசூரில் 5,000 வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும்: மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா

ஆட்சேபணை அற்ற அரசு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிக்கும் 5,000 பேருக்கு வீட்டுமனை பட்டா விரைவில் வழங்கப்படும் என்று ஒசூா் மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா தெரிவித்தாா். ஒசூா் மாநகராட்சி மாமன்றக் கூட்டம... மேலும் பார்க்க