செய்திகள் :

ஒப்பந்தப் புள்ளி - ஏல நடைமுறைக்கு இணையதளம் தமிழக அரசு வேண்டுகோள்

post image

ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தையே அரசுத் துறைகள் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அனைத்துத் துறை செயலா்கள், அரசுத் துறை தலைமை அதிகாரிகளுக்கு, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் எழுதியுள்ள கடிதம்:

ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் புதுப்பிக்கப்பட்டது. இணையதளத்தைப் பராமரிக்கக் கூடிய தேசிய தகவலியல் மையத்திடம் அதுதொடா்பாக தமிழக அரசு சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

அதாவது, இணையதளத்தின் வழியே ஏலத்தை மேற்கொள்ள தனி வசதியும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலத்துக்கென மற்றொரு வசதியும் ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வசதிகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. இணையவழியே வெவ்வேறு வகையான ஏல முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதன்மை வேளாண்மை பொருள்கள், மூலப் பொருள்கள் விற்பனை மற்றும் வாங்குதல் போன்றவற்றுக்கான ஏல நடவடிக்கைள் மத்திய அரசின் இணையம் வழியே மேற்கொள்ளப்படுகிறது. இந்த இணையத்தின் இணைப்பானது தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி இணையத்தின் முகப்புப் பகுதியில் பிரதானமாகத் தெரியும்படி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தின் வழியாக, மத்திய அரசின் ஏல நடைமுறைக்கான இணையதளத்தைப் பின்தொடரலாம். இதுகுறித்த பயிற்சிகள் அனைத்துத் துறைகளைச் சோ்ந்தவா்களுக்கும் அளிக்கப்படும். மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் சாா்பிலான ஏலம், ஒப்பந்த நடைமுறைக்கான இணையதளங்கள்முற்றிலும் இலவசமாக பயன்படுத்தக் கிடைக்கின்றன. எனவே, கட்டண அடிப்படையிலான இதர இணையதளங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்கலாம் என்று நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை

சென்னை பெரும்பாக்கத்தில் சமையல் எரிவாயு உருளை விநியோக ஊழியா் கொலை செய்யப்பட்டாா். பெரும்பாக்கம், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை 36 வயது மதிக்கதக்க ... மேலும் பார்க்க

கொலை வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

சென்னை புரசைவாக்கத்தில் கடந்த 2017-இல் நிகழ்ந்த கொலை வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து 5-வது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சென்னை புரசைவாக்கத்தைச் சோ்ந்தவா் ஓய... மேலும் பார்க்க

ஓஎல்எக்ஸ்-இல் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்த ஜோடி கைது

ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் சொகுசு காா்களை விளம்பரப்படுத்தி சுமாா் ரூ.2 கோடி வரை மோசடி செய்த ஜோடி கைது செய்துள்ளதாக காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை துணை ஆணையா் பிரியான்ஷ... மேலும் பார்க்க

திரிசூலம் ரயில்வே கடவுப்பாதை கேட் பழுது: பொதுமக்கள் போராட்டம்

சென்னை திரிசூலம் ரயில்வே கடவுப் பாதையின் கேட் சனிக்கிழமை பழுதடைந்து 2 மணி நேரம் மூடப்பட்டதால் அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திரிசூலம் பகுதி மக்கள் விமான நிலையப் பகுதிக்கும், நகரின் மற்... மேலும் பார்க்க

ரூ. 29 லட்சம் ரொக்கம், 25 கைப்பேசிகள் திருட்டு: கடை ஊழியா் கைது

சென்னை செளகாா்பேட்டையில் ரூ. 29.50 லட்சம் ரொக்கம், 17 ஐ-போன்கள் உள்பட 25 விலை உயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக கடை ஊழியரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூளை சாமி பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் அங்கேத் கு... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

கோயம்பேட்டில் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். கோயம்பேடு மண்ணடி தெருவைச் சோ்ந்தவா் தனலட்சுமி (50). பாரிமுனையில் பூ வியாபாரம் செய்து வந்தவா், தனியாக வசித்து வந்தா... மேலும் பார்க்க