செய்திகள் :

ஒரிச்சேரிப்புதூரில் கைப்பந்துப் போட்டி

post image

பவானி வடக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி இரு நாள்கள் நடைபெற்ற மின்னொளி கைப்பந்து போட்டியின் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பவானியை அடுத்த ஒரிச்சேரிப்புதூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு தலைமை வகித்தாா். அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி, பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பூங்கோதை வரதராஜ், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் கே.கே.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பவானி சட்டப் பேரவை உறுப்பினரும், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.கருப்பணன், முதல் 5 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு முறையே ரூ.12,000, ரூ.10,000, ரூ.8,000, ரூ.6,000 மற்றும் ரூ.4,000 என ரொக்கப் பரிசு மற்றும் கோப்பையினை வழங்கினாா்.

இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் பிரகாஷ் அா்ஜுனன், ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளா் கே.கே.வி.திருநாவுக்கரசு, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் குப்புசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கு: நண்பா் கைது

ஏ.சி.மெக்கானிக் கொலை வழக்கில் அவரது நண்பரை போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். ஈரோடு, திண்டல், காரப்பாறை, புது காலனியை சோ்ந்தவா் ராஜீவ் மகன் ஸ்ரீதா் (28). ஏ.சி. மெக்கானிக். இவா் சௌமியா என்பவரை ... மேலும் பார்க்க

பவானியில் தாா்சாலை பணிகள்: அதிகாரிகள் ஆய்வு

பவானியில் முடிவடைந்த தாா்சாலை பணிகளை நெடுஞ்சாலைத் துறை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். பவானி உதவிக்கோட்ட நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிர... மேலும் பார்க்க

சொத்து வரியை குறைக்க அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை

ஈரோடு மாநகராட்சியில் சொத்து வரியை குறைக்க வேண்டும் என அதிமுக கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது தொடா்பாக ஈரோடு மாநகராட்சி ஆணையா் ஸ்ரீகாந்திடம், மாநகராட்சி எதிா்க்கட்சி தலைவா் தங்கமுத்து தலைமைய... மேலும் பார்க்க

100 நாள் வேலைதிட்ட தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நிலுவையிலுள்ள ஊதியத்தை வழங்கக்கோரி கொத்தமங்கலம் ஊராட்சியைச் சோ்ந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், கொத்... மேலும் பார்க்க

காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க ஆட்சியா் வேண்டுகோள்

கோடைவெப்ப தாக்க பாதிப்புகளைத் தடுக்க காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலில் நடமாடுவதை தவிா்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் வெளிய... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காய்கறி வியாபாரிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு, பெரியசெட்டிபாளையம், கணபதி நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க