செய்திகள் :

`ஒரு வாரமா தூக்கமில்ல'- தொடர் மின் வெட்டு; தலையணையுடன் மின்சார அலுவலத்தில் தூங்கச் சென்ற மும்பை பெண்

post image

மும்பையில் பருவமழை தொடங்குவதில் தாமதமாகி வருகிறது. அதேசமயம் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் மின் தேவை அதிகரித்து அடிக்கடி மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் உறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மும்பை அருகில் உள்ள நவிமும்பை பகுதியில் அதிக அளவில் மின்வெட்டு நிலவுகிறது. நவிமும்பையில் உள்ள உல்வே 8வது செக்டரில் வசிக்கும் நிதர்ஷனா என்ற பெண், மின் வெட்டு பிரச்னையால் ஒரு வாரமாக இரவில் தூக்க முடியவில்லை என்று புகார் செய்துள்ளார்.

இது தொடர்பாக அப்பெண் நேரடியாக உள்ளூரில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கே சென்று பல முறை புகார் செய்தார். அப்படி இருந்தும் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. இதையடுத்து அப்பெண் தலையணையுடன் மின்சார அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தார்.

அதோடு அங்கு மின்சாரம் இருப்பதால் அங்கு உறங்க இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டது, அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அப்படி வாக்குவாதம் செய்தபோது அவர் அழுதுகொண்டே, ``ஒருவாரமாக இரவில் சரியாக தூங்கவில்லை..." என்று கூறும் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி இருக்கிறது. நள்ளிரவில் துண்டிக்கப்படும் மின்சாரம் அதிகாலை வரை வருவதில்லை என்றும் அவர் அழுதுகொண்டே தெரிவித்தார். அந்த வீடியோவில் அவர் பேசுகையில், ''வழக்கமாக இரவு 11 மணியளவில் வேலையிலிருந்து வீடு திரும்புவேன். மின்சாரம் இல்லாமல் வெப்பம் மற்றும் அசௌகரியத்துடன் இரவைக் கழிக்கவேண்டியிருக்கிறது.

மீண்டும் காலை 6 மணியளவில் வேலைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், மிகவும் சோர்வாகி விடுகிறது. நான் ஒரு வாரமாக சரியாகத் தூங்கவில்லை. தொடர்ந்து மின் வெட்டுகளைச் சமாளிக்க முடியவில்லை. மின் விநியோகத்திற்கு பொறுப்பானவர்கள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி, பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்'' என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்ணின் வித்தியாசமான இந்த எதிர்ப்பு சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்தது. பல குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் ஒரு சிக்கலை முன்னிலைப்படுத்தியதாக, நெட்டிசன்கள் அவரைப் பாராட்டினர். அதிகாரிகள் மின்வெட்டுப் பிரச்னைக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

"விருப்பமுடன் உறவு கொள்வது குற்றமன்று"- திருமணத்திற்கு முந்தைய உறவு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம்

தெலங்கானாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் போலீஸ் அதிகாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் பணியில் சேருவதற்கு முன்பிருந்தே ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அந்தப் பெண்ணுக்கும், அந்த நபருக்கும் இடையே பா... மேலும் பார்க்க

உத்தரபிரதேசம்: நீதிமன்றத்தில் தனது மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்!

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். கான்பூர் அருகில் அக்பர்பூர் என்ற இடத்தை சேர்ந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ... மேலும் பார்க்க

'தாயிடம் யாசகம் வாங்கணும்' - 15 வயதில் காணாமல் போனவர் 65 வயதில் சாமியாராகத் திரும்பிய சுவாரஸ்யம்!

குழந்தைகள் சிறுவயதில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்வதுண்டு. அவர்கள் சில ஆண்டுகள் கழித்து திரும்ப வந்துவிடுவதுண்டு. ஒரு சிலர் அப்படி திரும்ப வராமலே போய்விடுவர். காணாமல் போய் பல சகாப்த... மேலும் பார்க்க

மும்பை தமிழர்களின் நீண்டநாள் கனவு; `தமிழ்நாடு பவன்' அமைய த.வெ.க அரசு உதவுமா?

மும்பையில் அனைத்து மாநிலங்களுக்கும் விருந்தினர் விடுதி எனப்படும் கேரளா பவன், அஸ்ஸாம் பவன் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் மும்பையில் அது போன்ற ஒன்றை இது வரை கட்டவில்லை. இதற்கு தமிழ்நாட்... மேலும் பார்க்க

தோல்வி நிரந்திரம் அல்ல! ஐஐடியில் இடம் கிடைக்காத மகன், தந்தைக்கு ரூ.55 லட்சம் கார் பரிசளித்த தருணம்!

ஐஐடி நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தது, உடல் எடை அதிகரிப்பு, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் மன உளைச்சலில் இருந்த 26 வயது இளைஞர், இன்று தனது விடாமுயற்சியால் வாழ்... மேலும் பார்க்க

பல நாடுகளின் GDP-ஐ ஓவர்டேக் செய்யும் எலான் மஸ்க்! - பின்னால் இருப்பது டெஸ்லாவா, ஸ்பேஸ்எக்ஸ்?

உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை இதுவரை எந்தவொரு தனிநபரும் எட்டியதில்லை. ஆனால், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் விரைவில் அடையக்கூடும் என்று தற்போத... மேலும் பார்க்க