செய்திகள் :

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் மகா கும்பமேளா: பிரதமர் மோடி

post image

ஒற்றுமைக்கான மாபெரும் யாகம் நிறைவடைந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13ல் தொடங்கி 45 நாள்கள் நடைபெற்ற கும்பமேளா நிகழ்வு சிவராத்திரி பெருவிழாவோடு இனிதே நிறைவடைந்துள்ளது. இதில் ஒரு லட்சம் 2 லட்சம் அல்ல.. 65 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். இப்படியொரு மாபெரும் ஆன்மிக நிகழ்வு எந்த நாட்டிலும் நடைபெற்றதில்லை.

பொதுவாக கும்பமேளா நிகழ்வு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது பூரண கும்பமேளா என்றும், 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது மகா கும்பமேளா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உலகம் முழுவதிலுமிருந்து சாதுக்கள், துளவிகள், மடாதிபதிகள் பிரயாக்ராஜில் தங்கி நீராடினர். 45 நாள்களில் முக்கியமான 6 நாள்களில் திரளானோர் வந்து புனித நீராடிச் சென்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அரசியல் தலைவர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினார்கள். இதுதவிர நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமத்தில் புனித வழிபாடுகள் நடத்தினர். பல இளம்பெண்களும் தீட்சை எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் மகா கும்பமேளா நிறைவடைந்ததையடுத்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது,

ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான மகா கும்பமேளா நிறைவடைந்துள்ளது. மகா கும்பமேளா 140 கோடி மக்களின் நம்பிக்கை. 45 நாள்களும் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஒரே இடத்தில் திரண்டது மிகப்பெரிய விஷயம். எதிர்பார்த்ததை விட அதிகளவிலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு 50 ஆண்டுகால வரலாறு காணாத வீழ்ச்சியடைந்ததாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியாவின் 140 கோடி மக்கள்தொகையில் சுமார் 100 கோடி பேர், அத்தியாவசிய செலவுகளைத் தவிர மற்றவைக்... மேலும் பார்க்க

பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளியைக் கண்டுபிடிப்பவருக்கு 1 லட்சம்!

பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக, குற்றவாளியின் புகைப்படம் வெளியான நிலையில், அந்நபர் குறித்து தகவல் கொடுப்பவருக்கு 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று புணே காவல் துறை தெ... மேலும் பார்க்க

தில்லி பேரவையின் துணைத் தலைவராக மோகன் சிங் தேர்வு!

தில்லி சட்டப் பேரவையின் துணை தலைவராக பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல்வர் ரேகா குப்தா கொண்டுவந்த தீர்மானத்தைச் சுற்றுச்சுழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிந்தார், அ... மேலும் பார்க்க

துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 10,000 போனஸ்: யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

மகா கும்பமேளாவில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு போனஸ் அளிக்கவிருப்பதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.உத்தரப் பிரதேசம் மாநிலம், பிரயாக்ராஜில் வெகு விமரிசையாக நடைபெற்ற ம... மேலும் பார்க்க

மகா கும்பமேளா நிறைவு: தூய்மைப் பணிகளைத் தொடங்கி வைத்த முதல்வர் யோகி!

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கும்பமேளா நிறைவடைந்த நிலையில், தூய்மைப் பணிகளை அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார். பிரம்மாண்ட ஆன்மிக திருவிழாவான கும்பமேளா நிகழ்ந்த 45 நாள்களும் பிர... மேலும் பார்க்க

ரூ.75 லட்சம் கடன்.. 5 கொலைகள்.. 23 வயது இளைஞன் கொலைகாரனாக மாறியது ஏன்?

அளவுக்கு மீறிய கடனில் சிக்கிய இளைஞர் ஒருவர் 6 பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலி உள்பட தனது சொந்த குடும்பத்தினர் 6 பேரை ... மேலும் பார்க்க