செய்திகள் :

ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்: பாகிஸ்தான் வீரர் பேட்டி!

post image

34 வயதாகும் பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஸமான் ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறியுள்ளார்.

கடந்த 2017இல் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதிக்கு நுழையாமல் வெளியே செல்கிறது.

ஃபகார் ஸமான் டி20 உலகக் கோப்பையில் இருந்து சர்வதேச கிரிக்கெட் விளையாடவில்லை. கடைசியாக ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2023 உலகக் கோப்பையில் விளையாடினார்.

தற்போது பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறியதால் அவர் ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ளார் ஃபகார் ஸமான்.

ஓய்வு பெறுகிறேனா? வதந்திகளை நம்பாதீர்கள்

வங்கதேசத்துடன் போட்டியில் காயம் ஏற்பட்டு பேட்டிங்கில் 41 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது பாகிஸ்தான்.

ஓய்வு குறித்து ஃபகார் ஸமான் அவர் பேசியதாவது: :

நானும் இந்த ஓய்வு குறித்த வதந்திகளை கேள்விப்பட்டேன். எனது நண்பர்களும் இது குறித்து குறுஞ்செய்தி அனுப்பினார்கள். ஒருநாள் கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்தமானது. எனக்கு தைராய்டு இருப்பதால் கம்பேக் கொடுப்பதில் தாமதம் ஆகிறது. ஆனால், எனக்கு டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் கூட விளையாட நினைக்கிறேன்.

நான் எப்போது திரும்பி வருவேன் என்பது மட்டுமே கேள்வி. இன்னும் 3 வாரங்களில் நான் பயிற்சி செய்யலாம் என மருத்துவர் கூறியுள்ளார். அதனால், நான் மீண்டும் ஒரு மாதத்திற்குள் கிரிக்கெட் விளையாட தொடங்குவேன் என்றார்.

ஆப்கானிஸ்தானின் வெற்றிகளை இனி இப்படி கூற முடியாது; சச்சின் டெண்டுல்கர் கூறியதென்ன?

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நேற... மேலும் பார்க்க

அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் அரையிறுதியில் இந்திய அணி யாருடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குரூப் - ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிற... மேலும் பார்க்க

வலைப் பயிற்சியைத் தவிர்த்த ரோஹித் சர்மா! கடைசிப் போட்டியில் விளையாடுவாரா?

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ரோஹித் சர்மா இன்று(பிப்.27) நடைபெற்ற வலைப் பயிற்சியில் ஈடுபடாததால், நியூசிலாந்துக்கு எதிரான கடைசிப் போட்டியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழு... மேலும் பார்க்க

மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி மொத்த ஆஸி.க்கு எதிராக திட்டமிருக்கிறது: ஆப்கன் கேப்டன்

கிளன் மேக்ஸ்வெல்லுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் திட்டமிருப்பதாக ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷகிதி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நே... மேலும் பார்க்க

பக்குவமடைந்த தலைவன் ரோஹித் சர்மா..! மனம் திறந்த ஷிகர் தவான்!

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி, அவருடனான நட்பு குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார்.இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக ர... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசப் போட்டி ரத்து: மழைக்கு 2-வது வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.பாகிஸ்தானில் நடைபெறும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப்-ஏ பிரில் உள்ள இந்தியா, நியூசிலாந்து ஆகி... மேலும் பார்க்க