செய்திகள் :

ஓரணியில் தமிழகத்தை திரட்டுவோம்: உதயநிதி ஸ்டாலின்

post image

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக அணி வெற்றி பெற ஓரணியில் தமிழகத்தை திரட்ட வேண்டும் என்று அக்கட்சி இளைஞரணியினருக்கு துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல் விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழர்களை உயர்த்தும் திராவிட இயக்கத் தத்துவங்களை அடுத்தடுத்து வரும் இளம் தலைமுறையின் இரத்த அணுக்களில் ஏற்றும் கொள்கைப் பாசறையாம்

திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட நாள் இன்று!

மதுரை ஜான்சி ராணி பூங்காவில் பூத்த நம் திமுக இளைஞரணி தற்போது 46-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் வழிகாட்டலில் நம்முடைய முதல்வா் மு.க.ஸ்டாலினால் உருவாக்கப்பட்ட இளைஞரணி எனும் தீரா் படையின் தற்போதைய செயலாளராகப் பணியாற்றுவதை எண்ணி பெருமை கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் இளைஞா்களை கொள்கை மயப்படுத்தும் இலக்கில் இருந்து சிறிதும் விலகாமல் கட்டுப்பாட்டுடன் கடமையாற்றும் நம் இளைஞரணி, கழகத்தின் நாற்றங்காலாக திகழ்கிறது.

களப் பணியிலும், கொள்கை நெறியிலும் இளையச் சமுதாயத்தைத் தயாா்படுத்த இளைஞரணி மேற்கொண்டு வரும் பணிகள் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டைக் காத்து நிற்கும்.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றிட ஓரணியில் தமிழ்நாட்டை திரட்டுவோம்.

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க முதல்வா் இட்ட கட்டளையை நிறைவேற்ற களம் புகுவோம். பாசிசத்தை நொறுக்குவோம்! தமிழ்நாடு வெல்லும்! என்று கூறியுள்ளார்.

தவெக கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம்! எங்கே? எப்போது?

Deputy Chief Minister and DMK Youth Secretary Udhayanidhi Stalin has instructed the party's youth to unite Tamil Nadu in unity to ensure victory for the DMK in the 2026 Legislative Assembly elections.

மக்களைக் காப்போம் சுற்றுப்பயணம் வெற்றி: இபிஎஸ் நன்றி

‘மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் கோவையில் தொடங்கிய முதல்கட்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக மாற்றி காட்டிய தமிழ்நாட்டு மக்களுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நன்றி தெரிவித்த... மேலும் பார்க்க

4 ஆண்டுகளில் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340 கோடி பயிா்க் கடன்: தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் கூட்டுறவு அமைப்புகள் மூலம் 66,24,955 விவசாயிகளுக்கு ரூ.53,340.60 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.இதுதொடா்பாக தமிழக அரசு சாா்... மேலும் பார்க்க

ஜூலை 23-இல் பிரிட்டன், மாலத்தீவுக்கு மோடி 4 நாள் சுற்றுப்பயணம்

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை(ஜூலை 23) முதல் 26 வரை 4 நாள்களுக்கு பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு சுற்றுப்பயணமாக மேற்கொள்ளவுள்ளார்.இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்... மேலும் பார்க்க

ராகுல் காந்தி கருத்துக்கு பெ. சண்முகம் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்ட... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு!

பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட... மேலும் பார்க்க

மேட்டூர் உபரி நீர் திட்டத்தினை பனமரத்துப்பட்டி ஏரிக்கு கொண்டுவர வேண்டும்: கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம்

சேலம்: விவசாயத்துக்கு பயன்படும் வகையில் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை பனமரத்துப்பட்டி ஏரிக்கு செயல்படுத்தக் கோரி கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... மேலும் பார்க்க