யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 14,161 பேர் தேர்ச்சி!
கட்டாய ராணுவ சேவையை முடித்து வெளிவந்த பிடிஎஸ் பாடகர்கள்..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
தென் கொரியாவின் கட்டாய ராணுவ சேவையை முடித்த பிடிஎஸ் பாடகர்கள் வெளிவந்ததை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தென் கொரியாவில் 18-35 வயதுக்குள்ள ஆண்கள் கட்டாயமாக 18-21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற நிபந்தனை இருக்கிறது.
தென் கொரியாவில் பிடிஎஸ் என்ற பாடல் குழுவிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதில் மொத்தமாக 7 நபர்கள் இருக்கிறார்கள்.
இந்த பிடிஎஸ் குழுவில் இருந்து தற்போது வி (கிம் டே-ஹியூங்), ஆர்எம் (கிம் நாம்-ஜூன்) தங்களது 18 மாத ராணுவ சேவையை முடித்து வெளிவந்துள்ளார்கள்.
கடந்த டிச. 2023-இல் இருந்து ராணுவச் சேவையை தொடங்கிய வி, ஆர்எம் தற்போது ஜூனில் முடித்துள்ளார்கள்.
ஆர்எம் 15-ஆவது காலாட்படையிலும் வி எஸ்டீடி எனும் கடினமான சிறப்புப் பிரிவிலும் சேவையை முடித்தார்கள்.
இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஆர்எம், “நான் ராணுவத்திலிருந்து விடைபெற்றேன்” எனப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவிலும் பிடிஎஸ் குழுவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

விரைவில் இந்தக் குழுவினர் இசை நிகழ்ச்சியை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.