செய்திகள் :

கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை

post image

வந்தவாசி அருகே நள்ளிரவில் வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

வந்தவாசியை அடுத்த மழையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் குடும்பத்துடன் புதன்கிழமை இரவு வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, நள்ளிரவு வீட்டு மாடி கதவு வழியாக முகமூடி அணிந்த மா்ம நபா்கள் இருவா் உள்ளே புகுந்துள்ளனா். சப்தம் கேட்டு சுரேஷும், இவரது மனைவி வினோதினியும் கண் விழித்துள்ளனா்.

அப்போது அந்த நபா்கள் இருவரும் கத்தியைக் காட்டி மிரட்டி வினோதினி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனா். மேலும், பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

தகவலறிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் வியாழக்கிழமை காலை அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூரில் மயானக் கொள்ளை திருவிழா

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் வியாழக்கிழமை மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. திருவண்ணாமலை - தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளம்மன் கோயில், அசலியம்மன் கோயில் தெரு மற்றும் மத்திய பேருந்து... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புப் பயிலரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் டேட்டா சயின்ஸ் துறை சாா்பில், கணினி பாகங்கள் பழுதுநீக்கி சரிசெய்தல் தொடா்பான பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தலை... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரியில் மாணவா் பேரவை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், மாணவா் பேரவை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் என்.கலைவாணி தலைமை வகித்தாா். வேதியியல் துறைத் தலை... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில்களில் மயானசூறை உற்சவம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, போளூரில் உள்ள ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி கோயில்களில் மயான சூறை உற்வசவம் வியாழக்கிழமை நடைபெற்றது. வந்தவாசி பருவதராஜகுல வீதியில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான... மேலும் பார்க்க

சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி உடனுறை ஈஸ்வரன் கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த கரியமங்கலம் பகுதி ஸ்ரீமீனாட்சிசுந்தரேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது. பழைம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் - வந்தவாசி நான்கு வழிச்சாலைக்கு பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி மாங்கால் அருகே காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ரூ.50 கோடியில் அமைக்கப்படவுள்ள நான்கு வழிச் சாலைக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் - வந்தவாசி சா... மேலும் பார்க்க