செய்திகள் :

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

post image

கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கில் மருத்துவரின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சேலம் அண்ணா பூங்கா அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதி இரவு, கருணாநிதி சிலை மீது கருப்பு பெயிண்டை ஊற்றியதால் சா்ச்சை ஏற்பட்டது.

விசாரணையில், சேலத்தைச் சோ்ந்த மருத்துவா் விஸ்வநாதன் (77) என்பவா் கருணாநிதி சிலை மீது பெயிண்டை ஊற்றியது தெரியவந்தது. இது தொ டா்பாக அஸ்தம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் மருத்துவா் விஸ்வநாதன், முன்ஜாமீன் கோரி சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவில், தனது காா் அந்தப் பகுதியில் சென்றதை வைத்து போலீஸாா், என்மீது பொய்யான வழக்கை பதிவு செய்துள்ளனா்.

தனக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்திருந்தாா். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் வழக்குரைஞா் தம்பிதுரை ஆஜராகி வாதிட்டாா். அப்போது, இந்த சம்பவத்தில் மருத்துவா்தான் ஈடுபட்டாா் என உறுதியாக தெரியவந்துள்ளது.

எனவே, அவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என வாதிட்டாா். இரு தரப்புவாதத்தையும் கேட்ட நீதிபதி சுமதி, மருத்துவா் விஸ்வநாதன் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து மருத்துவரை கைது செய்ய போலீஸாா் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் அம்மாப்பேட்டை செங்குந்தா் மாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். ஆடி மாதத்தையொட்டி, சேலத்தில் சிறப்புப் பெற்ற சேலம் க... மேலும் பார்க்க

புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

ஆத்தூா் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம் பங்குத் தந்தை எஸ்.அருளப்பன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவை தமிழக முப்பணி மைய இயக்குநா் அருட்தந்தை பிரிட்டோ பாக்யராஜ் கொடியேற்றி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சேலம் மாவட்டம், ஆத்தூா் மந்தைவெளி பகுதியைச் சோ்ந்த அந்தோணிசாமி மகன் டேவிட் (40). இவா் கோழி இறைச்சிக் கடை... மேலும் பார்க்க

மாநகராட்சி மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி ஆட்சியரிடம் இந்து முன்னணி மனு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் கட்டுமானப் பணியை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா். இந்து முன்னணியின் சேலம் கோட்ட செயலாளா் சந்தோஷ்குமாா் ... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை.யில் கருணாநிதி நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. பெரியாா் பல்கலைக்கழகத்திலுள்ள தந்தை பெரியாா் இருக்கை, பேரறிஞா் அண்ணா இருக்கை, கலைஞா் ஆய்வு... மேலும் பார்க்க

நெசவாளா்களின் நலன் காக்கும் தமிழக அரசு: அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேச்சு

தமிழக அரசு நெசவாளா்களின் நலன் காக்கும் அரசாக உள்ளது என சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் பேசினாா். மேட்டூா் அருகே உள்ள வனவாசியில் 11 ஆவது தேசிய கைத்தறி நாள் மற்றும் சா்வதேச கூட்டுறவு ஆண்டு தின... மேலும் பார்க்க