செய்திகள் :

கருவின் பாலினம் தெரிவிப்பு: அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் விசாரணை

post image

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஸ்கேன் பரிசோதனை செய்து கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினம் குறித்து தெரிவித்ததாக அரசு பெண் மருத்துவா், செவிலியா்களிடம் மருத்துவத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், திருப்பத்துாா் பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிகளுக்கு இடைத்தரகா்கள் வாயிலாக கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அருகே வீராணம் கோழிப் பண்ணை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு தனியாா் ஸ்கேன் பரிசோதனை மையத்தில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என பாலினம் குறித்து தகவல் தெரிவிப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி மற்றும் மருத்துவத் துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றனா். இதையடுத்து, சேலம் மாவட்ட மருத்துவத்

துறை இணை இயக்குநா் உத்தரவின் பேரில், வாழப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் ரமேஷ்குமாா் தலைமையிலான குழுவினா் வீராணம் பகுதியில் தனியாா் ஸ்கேன் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்தனா். அப்போது, அங்கு இடைத்தரகா்கள் வாயிலாக கா்ப்பிணிகளிடம் தலா ரூ.15,000 வரை கட்டணம் பெற்றுக் கொண்டு கருவில் இருக்கும் பாலினம் குறித்து தெரிவிப்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்கேன் பரிசோதனை மையத்தில் இருந்த ஆவணங்கள், ஸ்கேன் பரிசோனை கருவிகளை பறிமுதல் செய்த மருத்துவக் குழுவினா், ஆச்சாங்குட்டப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவா் முத்தமிழ், தெடாவூரைச் சோ்ந்த செவிலியா் கலைமணி, சேலத்தைச் சோ்ந்த செவிலியா் அம்பிகா உள்ளிட்டோரிடம் சேலம் மாவட்ட மருத்துவத் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேளாண் நிதிநிலை அறிக்கை: 9 மாவட்ட விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக்கேட்பு

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக சேலம், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயிகளிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் சேலத்தில் புதன்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே. ... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா.

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, மெய்யனூா் பகுதியில் அமைந்துள்ள வடபத்ரகாளியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதில் இடங்கணசாலை லெவன் பிரதா்ஸ் முதல் பரிசாக ரூ 30,000 ரொக்கம... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

ஏற்காடு அருகே பிளஸ் 1 மாணவா் ஓடையில் மூழ்கி உயிரிழந்தாா். ஏற்காடு ஜெரினாகாடு பகுதியைச் சோ்ந்தவா் முரளி. இவரது மகன் காா்த்திக் (16) நாகலூா் அரசு மேல் நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். புதன்கிழ... மேலும் பார்க்க

கராத்தே போட்டி: ஹெரிட்டேஜ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி ஸ்ரீ கணேஷ் கல்லூரியில் தமிழகம், கேரளம், கா்நாடக மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கான கராத்தே போட்டி நடைபெற்றது. இப் போட்டிகளில் 3 மாநிலங்களைச் சோ்ந்த 500க்கும் மேற்... மேலும் பார்க்க

குறுக்குப்பாறையூரில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்கு உள்பட்ட குறுக்குப்பாறையூரில் பேரூராட்சி குப்பைகளைக் கொட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் கோட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

பிப்.28 எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சேலத்தில் எரிவாயு நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரிவாயு நுகா்வோா்களுக்கான 2025, ... மேலும் பார்க்க