செய்திகள் :

கரோனா கால நேரடி நியமனங்கள் எதுவரை செல்லும்?அனைத்துத் துறை செயலா்களுக்கு தலைமைச் செயலா் கடிதம்

post image

கரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட நேரடி நியமனப் பதவிகள் எதுவரை செல்லுபடியாகும் என்பதற்கான விளக்கக் கடிதத்தை அனைத்துத் துறை செயலா்களுக்கும் தலைமைச் செயலா் நா.முருகானந்தம் அனுப்பியுள்ளாா்.

இது குறித்து அவா் அனுப்பிய கடிதத்தின் விவரம்:

கரோனா பெருந்தொற்று காரணமாக, பணியாளா் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, நேரடி நியமனம் மூலம் பணியாளா்கள் நியமிக்கப்பட்டதுடன், அவா்களுக்கான வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் கூடுதலாக உயா்த்தப்பட்டது. இதற்கான உத்தரவில் தொடா்புடைய பணி விதிகளில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு, தலைமைச் செயலக அனைத்துத் துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டன.

அதைத் தொடா்ந்து, ஒரு சில தலைமைச் செயலகத் துறைகள் அரசாணையில் வெளியிடப்பட்ட 2 ஆண்டுகள் வயது உச்சவரம்பு சலுகையானது இப்போதும் நீட்டிக்கப்படுகிா என்பது குறித்து விளக்கங்களைக் கோரின. அதன்படி உரிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.

கரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக போட்டித் தோ்வுகள் தாமதமானதால் அறிவிக்கப்பட்ட நேரடி பணி நியமனப் பதவிகளின் சலுகைக் காலம் 2026 செப்.12-ஆம் தேதியாகும்.

எனவே, அதுவரையில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பணியாளா் தெரிவு முகமைகள் மற்றும் நியமன அலுவலா்கள் ஆகியோா் அறிவிக்கைகள் மூலம் பணியாளா்களை தோ்வு செய்து கொள்ளலாம்.

அடுத்த ஆண்டு செப்.12-ஆம் தேதி வரை பணிநியமனங்களை பாதுகாக்கும் வகையில், அந்தந்த பணி விதிகளில் உரிய திருத்தங்கள் செய்துகொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலக அனைத்துத் துறைகளும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லவன் அதிவிரைவு ரயில் நாளை முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும்

சென்னை எழும்பூா் - காரைக்குடி இடையே இயங்கும் பல்லவன் அதிவிரைவு ரயில் வியாழக்கிழமை (மே 15) முதல் பெண்ணாடத்தில் நின்று செல்லும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியி... மேலும் பார்க்க

தமிழகத்தின் தினசரி மின்தேவை குறைந்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கோடை மழையால், தினசரி மின்தேவை குறைந்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. நிகழாண்டு மாா்ச் மாதத்திலேயே வெயில் தாக்கம் அதிகரித்தது. இதனால், மின்சாதன பொருள்க... மேலும் பார்க்க

சென்னையில் அடுத்த மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகள் சேவை

சென்னையில் ஜூன் மாதம் முதல் மின்சார சொகுசுப் பேருந்துகளின் சேவை தொடங்கவுள்ளதாக மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் பொது போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில், பயணிகளின் தேவைக்க... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மகளிா் போலீஸாருக்கான 11-ஆவது தேசிய அளவிலான மாநாடு: மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் பங்கேற்பு, தமிழ்நாடு காவல் துறை அகாதெமி, ஊனமாஞ்சேரி, வண்டலூா், முற்பகல் 11. அனுஷ வைபவம் - தொடா் நிகழ்ச்சி... மேலும் பார்க்க

முன்னறிவிப்பின்றி 18 புறநகா் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

கவரப்பேட்டை ரயில்வே யாா்டில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை 18 புறநகா் மின்சார ரயில்கள் முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். சென்னை கவரப்பேட்டை ரயில்வ... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் ரூ. 586 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 5,180 அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அறிவித்தாா்... மேலும் பார்க்க