செய்திகள் :

கவிஞர் புலமைப் பித்தன் மனைவி காலமானார்!

post image

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசவைக் கவிஞராக இருந்தவரும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பருமான மறைந்த கவிஞர் புலமைப் பித்தனின் மனைவி தமிழரசி, நேற்று கோயம்புத்தூரில் காலமானார். அவருக்கு வயது 83.

எம்.ஜி.ஆர் நடித்த ’குடியிருந்த கோவில்’ படத்தில் வரும் ‘நான் யார் நீ யார்’ பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானவர் புலமைப்பித்தன். தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களில் இவர் எழுதிய பாடல்கள் ஹிட் ஆகின. அறுபதுகளில் தொடங்கிய இவரது பயணம் 2015 வரை சினிமாவில் தொடர்ந்தது. சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். பட்டு வண்ண ரோசாவாம், உச்சி வகுந்தெடுத்து ஆகிய எவர்கிரின் பாடல்கள் இவர் எழுதியவையே.

எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது சட்டமேலவைக்கு இவர்  தேர்ந்தெடுக்கப்பட்டார் மேலவையின் துனைத் தலைவராகவும் இருந்தவர். மேலும் தமிழக சட்டப்பேரவையின் அரசவைக் கவிஞராகவும் இவரை நியமித்தார் எம்.ஜி.ஆர்.

புலமைப் பித்தன்

இவரின் மனைவி தமிழரசி கோபிச்செட்டி பாளையத்தைச் சேர்ந்தவர். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். பிள்ளைகள் இருவரும் மரணமடைந்து விட்ட நிலையில், புலம்மைப் பித்தனும் 2021-ம் ஆண்டு காலமானார். அப்போது முதல் தமிழரசி கோவையில் வசிக்கும் தன்னுடைய மகன் வழிப் பேரன் வீட்டில் வசித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக வயோதிக பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த தமிழரசி, நேற்று முன்தினம் இரவு காலமானார். உடலடக்கம் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

தற்சமயம் அதிமுக-வில் இருக்கும் புலமைப் பித்தனின் தம்பி மகன் மோகனிடம் நாம் பேசியபோது, ``கட்சி அளவுல யாருக்கும் நாங்க சொல்லலை. பெரியம்மாவின் சொந்த ஊர் கோபிங்கிறதால செங்கோட்டையனுக்கு மட்டும் சொல்லலாம்னு தோணுச்சு.. ஆனா அவர் இப்ப கட்சி மாறிட்டதால அந்த முடிவைக் கூட கை விட்டுட்டோம்" என்றார்.

விடுகதை போட்டி! - சிறுகதை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

குறை நம் பார்வையில்தான்! - மன்னிப்பு கேட்க துடிக்கும் மனம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

சாகித்ய அகாடமி விருது பெற்றக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார்!

சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமாகியிருக்கிறார். உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் இன்று இயற்கை எய்தினார். அவருக்கு வயது 92. கவிஞர், சிறுகதை ஆசிரியர், நாடக ஆசிரியர... மேலும் பார்க்க

சேலம்: புது பொலிவுடன் அரசு அருங்காட்சியகம்; என்ன ஸ்பெஷல், பார்க்க வேண்டிய அரிய பொக்கிஷங்கள் என்ன?

சேலம் மாவட்டம் மணக்காடு அருகில் ரூ.4.91 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்துடன் புது பொலிவில் மக்கள் பார்வைக்கு தயாராகி வருகிறது அரசு அருங்காட்சியகம் என்ற தகவலோடும், ஆர்வத்தோடும் என்ன நடக்கிறது அரசு அருங்க... மேலும் பார்க்க

அச்சச்சோ அதுக்குள்ள இறங்க வேண்டிய இடம் வந்துடுச்சா? - பேருந்தும் பாடல்களும்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Vikatan Play: கலை கலைக்கானதா? மக்களுக்கானதா? எழுத்தாளர் இரா.முருகவேள் படைப்புகள் - ஆடியோ வடிவில்

“ தமிழ்ச்சூழலில் தான் கொண்ட பொதுவுடமை அரசியலை தன் களச்செயற்பாட்டில் மட்டுமின்றி படைப்பின் வழியிலும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார் எழுத்தாளர் இரா.முருகவேள். அரசியல் செயற்பாட்டாளர், வழக்கறிஞர், மொழிப... மேலும் பார்க்க