செய்திகள் :

காங்கிரஸ் அலுவலகங்களைச் சூறையாடிய பாஜகவினர்!

post image

மும்பை மற்றும் கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவின் இளைஞர் அணியினர் சூறையாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மும்பையில் வியாழக்கிழமை (டிச. 19) காங்கிரஸுக்கு எதிரான முழக்கத்தோடு அலுவலகத்திற்குள் நுழைந்த பாஜகவின் இளைஞர் அணியான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பு, அலுவலகத்தின் தளவாடங்களைச் சேதப்படுத்தி, காங்கிரஸ் தலைவர்களின் புகைப்படங்களைக் கிழித்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்ததாவது, மும்பை, கொல்கத்தாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களை பாஜகவினர் சூறையாடிய சம்பவம், ஒரு திட்டமிடப்பட்ட சதியே’’ என்று கூறினார்.

தொடர்ந்து, மகாராஷ்டிரத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான விஜய் வதேத்திவார் கூறியதாவது, அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்துக்களில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சிதான் இது. இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்; உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் அலுவலகத்தின் அருகே காவல் ஆணையர் அலுவலகமும் இருப்பதால், எப்போதும் அந்தப் பகுதியில் காவல்துறையினர் இருந்துகொண்டே இருப்பார்கள். இது நடக்கப் போகிறது என்ற தகவல் அவர்களுக்கு தெரியாதா? காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, 2 நாள்கள் விவாதத்தின் முடிவில், கடந்த செவ்வாய்க்கிழமை (டிச. 17) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சையானது.

இதனைக் கண்டித்து, அம்பேத்கருக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசிய அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரை பாஜக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராகுல் காந்தி மீது எஃப்ஐஆர் பதிவு!

அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலகக்கோரியும், அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளி... மேலும் பார்க்க

காயமடைந்த எம்.பி.க்களிடம் நலம் விசாரித்த மோடி!

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காயமடைந்த பாரதிய ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாகப் பேசி, நலம் விசாரித்தார். போராட்டத்தில் காயமடைந்த பாஜக எம்.பி.க்கள் பிரதாப் ச... மேலும் பார்க்க

டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!

அஸ்வின் திடீரென ஓய்வு அறிவிக்க அவமானம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று அஸ்வின் தந்தை கூறியதற்கு அஸ்வின் மறுப்பு தெரிவித்துள்ளார்.அஸ்வினின் திடீர் ஓய்வு குறித்து, அவரது தந்தை அளித்த பேட்டி சமூக வலைதளங்களி... மேலும் பார்க்க

பிரிட்டன் மன்னருடன் பேசிய பிரதமர் மோடி!

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச. 19) தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் வகையிலான ஆக்கப்பூர்வமான ... மேலும் பார்க்க

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர்! -பாஜக விமர்சனம்

ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர் என்று பாஜக எம்பியும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை... மேலும் பார்க்க

அம்பேத்கர் குறித்த பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: மமதா

அம்பேத்கரை அவமதிக்கும் வகையிலான பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்த பாஜகவின் செயல் மிகவும் ம... மேலும் பார்க்க