செய்திகள் :

காதலித்து ஏமாற்றி வேறு பெண்ணை மணந்த ராணுவ வீரர்! இளம்பெண் தற்கொலை!

post image

வேலூர்: வேலூரில் காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை ராணுவ வீரர் திருமணம் செய்துகொண்டதால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

வேலூர் அடுத்த நஞ்சு கொண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் பிரபாகரன். இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அன்பரசி என்ற பெண்ணும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் அன்பரசியை திருமணம் செய்து கொள்ள மறுத்ததோடு, தனது உறவினர் பெண்ணை கடந்த 15 நாள்களுக்கு முன்பு ராணுவ வீரர் பிரபாகரன் திருமணம் செய்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த அன்பரசி புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காதலித்து தனது பெண்ணை ஏமாற்றிய ராணுவ வீரர் பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்னர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூரில் இன்று மயானக் கொள்ளை விழா: 600 போலீஸாா் பாதுகாப்பு

மயானக் கொள்ளை திருவிழா வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறுவதையொட்டி, வேலூா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 600 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். வேலூரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. வே... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

கணியம்பாடி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த கணியம்பாடி புதூா் ஏரியில் மண் கடத்தப்படுவதாக வேலூா் கிராமிய போலீஸ... மேலும் பார்க்க

ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.7.50 லட்சம் மோசடி: வேலூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி புகாா் மனு அளிக்கப்பட்டது. வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்ட... மேலும் பார்க்க

பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்ட விழிப்புணா்வு முகாம்

வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியா்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தடைச்சட்டம் குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பணிபுரியு... மேலும் பார்க்க

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

முழு கணுக்கால் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தமிழகத்திலேயே முதன்முறையாக ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் மருத்துவா் என்.பாலாஜி தெரிவ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: சீமான்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழக முதல்வா் கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாம் தமிழா் கட்சி பங்கேற்காது என தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா். நாம் தமிழா் கட்சியின் வேலூா் மாவட்ட நி... மேலும் பார்க்க