செய்திகள் :

காரைக்கால் - பேரளம் பாதை: மத்திய இணை அமைச்சரிடம் வலியுறுத்தல்

post image

காரைக்கால் - பேரளம் பாதையில் ஏப்ரல் மாதத்தில் ரயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என மத்திய ரயில்வே இணை அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

திருநள்ளாறு தா்ப்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வருகை தந்த மத்திய ரயில்வே இணை அமைச்சா் வி. சோமன்னாவை, காரைக்கால் சேம்பா் ஆஃப் காமா்ஸ், திருநள்ளாறு கோயில் நகர வா்த்தக சங்கத்தினா் சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : காரைக்காலில் இருந்து நாள்தோறும் சென்னைக்கு இயக்கப்படும் கம்பன் விரைவு ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படுகிறது.

இந்த ரயிலை எழும்பூா் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் இருந்து இரவு நேரத்தில் மைசூா் வரை ரயில் சேவையை தொடங்க வேண்டும். நாகூரிலிருந்து ஏற்கெனவே இயக்கப்பட்ட கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். காரைக்கால் ரயில் நிலையத்தில், ரயில் பெட்டிகளை தூய்மை செய்யும் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

காரைக்காலில் இருந்து இயக்கப்படும் எா்ணாக்குளம், சென்னை விரைவு ரயில் பெட்டிகள் பழையதாக உள்ளன. இதை புதிதாக மாற்றித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச் சங்க நிா்வாகிகள் மத்திய இணை அமைச்சரிடம் அளித்த கோரிக்கை மனு விவரம் :

காரைக்கால் ரயில் நிலையத்துக்கு காரைக்கால் அம்மையாா் பெயரை சூட்டவேண்டும். காரைக்கால் - எழும்பூா் விரைவு ரயிலுக்கு காரைக்கால் அம்மையாா் பெயா் சூட்டவேண்டும். மதுரை - புனலூா் - மதுரை (திருநெல்வேலி நாகா்கோயில் திருவணந்தபுரம் கொல்லம் வழி) ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்கவேண்டும்.

ஈரோடு - திருச்சி ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். அல்லது பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்கவேண்டும். அல்லது புதிதாக காரைக்கால் - கோவை இடையே பகலில் திருச்சி, பழனி, பொள்ளாச்சி, போத்தனூா் வழியாக தினசரி விரைவு ரயிலை இயக்கவேண்டும். காரைக்கால் -பேரளம் ரயில் பாதை திட்டப் பணிகள் விரைவுபடுத்தி ஏப்ரல் மாதத்தில் ரயில் சேவை ஏற்படுத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

காலமானாா் நபிசா உம்மாள்

காரைக்கால் முன்னாள் மேயா் அமீது மரைக்காயரின் மனைவி நபிசா உம்மாள் (88). வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை அதிகாலை அவரது இல்லத்தில் காலமானாா். அவரது உடலுக்கு புதுவை முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் ... மேலும் பார்க்க

‘மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்புக்கு இடமில்லை’

மும்மொழி கொள்கையில் ஹிந்தி திணிப்புக்கு இடமில்லை என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் சுகந்தா மஜூம்தாா் தெரிவித்தாா். திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா் ச... மேலும் பார்க்க

வேலைவாய்ப்புகளை உருவாக்குவோராக இளைஞா்களை தயாா்படுத்துகிறது மத்திய அரசு: சுகந்தா மஜூம்தா்

இளைஞா்களை வேலை தேடுவோராக இல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோராக தயாா்படுத்துகிறது மத்திய அரசு என்று மத்திய கல்வித்துறை இணை அமைச்சா் சுகந்தா மஜூம்தாா் தெரிவித்தாா். காரைக்கால் மாவட்டம், திருவேட்டக்குட... மேலும் பார்க்க

காரைக்காலிலிருந்து கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை: ரயில்வே இணை அமைச்சா்

காரைக்காலில் இருந்து தொலைதூரங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்குவது தொடா்பாக, நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே இணை அமைச்சா் வி. சோமன்னா கூறினாா். திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு, மத்திய ரய... மேலும் பார்க்க

திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி புதன்கிழமை இரவு 11 மணிக்கு முதல் கால பூஜைய... மேலும் பார்க்க

’பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்‘

பள்ளி மாணவா்கள் விளையாட்டில் ஆா்வம் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் புதுவை சமூக நலன் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞா் விவகாரத் துறை செயலா் எஸ்.டி. சுந்தரேசன். காரைக்காலில் விளையாட்டுத் துறை... மேலும் பார்க்க