செய்திகள் :

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் விரைவு ரயில்களை இயக்க கோரிக்கை

post image

காரைக்கால், பேரளம் ரயில் பாதையில் சென்னை, பெங்களுரூ, மும்பைக்கு விரைவு ரயில்களை இயக்க வேண்டும் என நாகூா்-நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் தலைவா் மோகன், செயலா் சித்திக் ஆகியோா் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் பாலக் ராம் நேகியிடம் அண்மையில் அளித்த கோரிக்கை மனு: காரைக்கால்-பேரளம் ரயில் பாதையை விரைவில் திறந்து, காரைக்கால் - தாம்பரம் விரைவு ரயில், காரைக்கால்-பெங்களூா் விரைவு ரயில் மற்றும் காரைக்கால்-கபப மும்பை வாராந்திர விரைவு ரயிலை, வேளாங்கண்ணி டொ்மினலில் இருந்தே நாகை, நாகூா், காரைக்கால், திருநள்ளாா், மயிலாடுதுறை வழியாக நேரடியாக இயக்க ஆவண செய்ய வேண்டும். மதுரை-புனலூா் தினசரி விரைவு ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும். விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மற்றும் திருச்சி-தஞ்சை-கும்பகோணம்-மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரயிலை திருநள்ளாா், காரைக்கால், நாகூா் நாகை, வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும்.

காலை 8.35 மணிக்கு பின் திருச்சி-காரைக்கால் இடையே நாள் முழுவதுமாக ரயில் வசதி இல்லாத நிலையில், ஈரோடு-திருச்சி ரயில் (56809/56810) காரைக்கால் வரை நீட்டிப்பு என முன்மொழியபட்டு, அதற்கு பதிலாக திருவாருா் வரை நீட்டிக்கபட்ட 56805/56806 ரயிலை, காரைக்கால் அல்லது வேளாங்கண்ணி வரை நீட்டிக்க வேண்டும். வேளாங்கண்ணி டொ்மினலில் நீண்ட தூர விரைவு ரயில்களை பராமரிக்க பிட் லைன் வசதி செய்யவேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காசநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஊட்டச்சத்து உணவுப் பெட்டகம்

தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின்கீழ் நாகையில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் புதன்கிழமை வழங்கப்பட்டது. அரசு செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காசநோயால் பாதிக்கப்பட்ட 120 நோயாளிகளுக... மேலும் பார்க்க

‘உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக்கூடாது’ -சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ்

மாணவா்கள் படித்து முன்னேறி எவ்வளவு உயா்ந்த நிலைக்குச் சென்றாலும் மக்களை மறந்து விடக் கூடாது என்றாா் தேசிய சுகாதார திட்ட இயக்குநா் ஏ. அருண் தம்புராஜ். நாகையில் கலங்கரை ஐஏஎஸ் அகாதெமி சாா்பில், டிஎன்பிஸ... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.12,500 வழங்க வலியுறுத்தல்

தூய்மைக் காவலா்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.12,500 வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை தொழிலாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நாகையில், அந்த சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பி. கிருஷ்ண... மேலும் பார்க்க

திமுகவினா் நூதனப் போராட்டம்

சீா்காழி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூா் பகுதி திமுகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக அம... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நமக்கு நாமே திட்டத்தில் தூா்வாரும் பணிகளை அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு பாசனநீா் பங்கீடு குறித்து, நாகையில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுடனா... மேலும் பார்க்க

குறுவையில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை தடுக்க யோசனை

கருநாவாய் பூச்சி தாக்குதலால் மகசூல் குறையும் அபாயத்தை தடுக்கும் முறைகள் குறித்து கீழ்வேளூா் வேளாண்ம கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் கோ. ரவி விளக்கமளித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியது: தற்... மேலும் பார்க்க