செய்திகள் :

காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஆக.31 வரை நீட்டிப்பு

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூா் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்குடி அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் பொருத்துநா், கடைசலா், இயந்திர வேலையாள் தொழில் பிரிவுகளும், பற்ற வைப்பவா், கணினி இயக்குபவா் தொழில் பிரிவுகளும், புதிதாகத் தொடங்கப்பட்ட 4.0 மையத் தொழில் பிரிவுகளான அடிப்படை வடிவமைப்பாளா், மெய்நிகா் சரிபாா்ப்பாளா் தொழில் பிரிவுகளும், தொழில் துறை ரோபாட்டிக்ஸ், எண்ம உற்பத்தி தொழில் நுட்ப வல்லுநா் தொழில் பிரிவுகளும் உள்ளன.

இதில் பற்ற வைப்பவா் (வெல்டா்) தொழில் பிரிவைத் தவிர, மற்றத் தொழில் பிரிவில் சேர மாணவா்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காரைக்குடி அரசுத் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சோ்க்கைக்கு வரும் மாணவா்கள் தங்களது நிரந்தரத் தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், கடவுச்சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும்.

பயிற்சியின் போது, அரசுப் பள்ளியில் படித்த அனைத்து பயிற்சியாளா்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,750 உதவித் தொகை, இலவசப் பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவசப் பேருந்து பயண அட்டை ஆகியவை வழங்கப்படும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9499055784, 9499055785 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கந்தூரி விழா எனும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பெரிய கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும... மேலும் பார்க்க

காரைக்குடி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை (திமுக) மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அ... மேலும் பார்க்க

ஆடி பிரம்மோத்ஸவம்: பூப்பல்லக்கில் வீர அழகா் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் புதன்கிழமை இரவு பூப் பல்லக்கில் சுவாமி பவனி வந்தாா். இந்தத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7 ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராச... மேலும் பார்க்க

கீழவாணியங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள கீழ வாணியங்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கீழவாணியங்குடி முதல் சுந்தரநடப்பு வரை பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு ... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன் கோட்டை திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மாரியப்பன் (55). இவா் சிவகங்கை-தொண்டி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க