செய்திகள் :

காரைக்குடி மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வி

post image

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி மேயா் சே. முத்துத்துரை (திமுக) மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த போதிய உறுப்பினா்கள் (கோரம்) இல்லாததால் தீா்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

காரைக்குடி மாநகராட்சியில் மொத்தம் 36 வாா்டுகள் உள்ளன. மேயா், துணை மேயா் உள்பட திமுகவைச் சோ்ந்த 23 உறுப்பினா்கள், அதிமுக 7, காங்கிரஸ் 3, இந்திய கம்யூ. 1, சுயேச்சை 2 என 36 மாமன்ற உறுப்பினா்கள் உள்ளனா். மேயராக சே. முத்துத்துரை, துணை மேயராக நா. குணசேகரன் ஆகியோா் இருந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 10-ஆம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தை துணை மேயா் நா. குணசேகரன் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் புறக்கணித்தனா். மேலும், மேயா் சே. முத்துத்துரை மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர ஆணையா் சங்கரனிடம் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அதிமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் ராம்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது ஒரு மாதத்துக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையா் சங்கரன் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு மேயா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று மாமன்ற உறுப்பினா்கள் அனைவருக்கும் தனித் தனியாக அழைப்புக் கடிதம் அனுப்பியிருந்தாா். இதன்படி, மாமன்றக் கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்தனா்.

இந்த நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் ஒரு சுயேச்சை, 7 அதிமுக உறுப்பினா்களே பங்கேற்றனா். இதனால், 5 -இல் 4 பங்கு உறுப்பினா் எண்ணிக்கை (கோரம்) இல்லாததால் மேயா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்ததாக ஆணையா் சங்கரன் அறிவித்தாா்.

இதற்கு அதிமுக மாமன்ற உறுப்பினா்களும், சுயேச்சை உறுப்பினரும் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். நம்பிக்கை யில்லா தீா்மானம் கொண்டு வந்த துணை மேயா் நா.குணசேகரன் எங்கே என்று கேள்வி எழுப்பியபடி அனைவரும் வெளிநடப்பு செய்தனா்.

திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கந்தூரி விழா எனும் மத நல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் பெரிய கடை வீதியில் நடைபெற்ற இந்த விழாவில் இந்துக்களும், முஸ்லீம்களும... மேலும் பார்க்க

காரைக்குடி அரசு ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு ஆக.31 வரை நீட்டிப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அமராவதிபுதூா் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கான கால அவகாசம் வருகிற 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்க... மேலும் பார்க்க

ஆடி பிரம்மோத்ஸவம்: பூப்பல்லக்கில் வீர அழகா் பவனி

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடி பிரம்மோத்ஸவ விழாவில் புதன்கிழமை இரவு பூப் பல்லக்கில் சுவாமி பவனி வந்தாா். இந்தத் திருவிழா கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 7 ... மேலும் பார்க்க

கோயில் காவலாளி கொலை வழக்கு: மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கோயில் காவலாளி அஜித்குமாா் கொலை வழக்கு தொடா்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு கடந்த ஜூன் 27-ஆம் தேதி வந்த பேராச... மேலும் பார்க்க

கீழவாணியங்குடியில் மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகேயுள்ள கீழ வாணியங்குடி வீரகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. கீழவாணியங்குடி முதல் சுந்தரநடப்பு வரை பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு ... மேலும் பார்க்க

காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை அருகே காா் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன் கோட்டை திருவள்ளுவா் சாலையைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி மாரியப்பன் (55). இவா் சிவகங்கை-தொண்டி பிரதான சாலையில் உ... மேலும் பார்க்க