செய்திகள் :

காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வருகை: விஜய்யை விமர்சித்த திருமாவளவன்

post image

காலவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதாக தவெக தலைவர் விஜய்யை விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கட்சித் தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா, தமிழக ஆளும் கூட்டணியை விமர்சித்திருந்தனர்.

இதையும் படிக்க : பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி!

இந்த நிலையில், தருமபுரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் புதன்கிழமை இரவு பேசிய திருமாவளவன் விஜய்யை விமர்சித்துள்ளார்.

திருமாவளவன் பேசியதாவது:

“அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் போன்ற மாமனிதர்களின் கொள்கைகளில் எனக்கு தெளிவு இருக்கிறது, தீவிரமான பிடிப்பு இருக்கிறது. ஆகையால், என்னை எந்த கொம்பனாலும் விலைக்கு வாங்க முடியாது.

சராசரி அரசியல்வாதியாக இருந்திருதால் கட்சிக்கு எப்போதே அங்கீகாரம் பெற்றிருக்க முடியும்.

10 ஆண்டுகள் தேர்தல் அரசியலுக்கு வராமல் மொத்தம் 35 ஆண்டுகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற பாடுபட வேண்டியிருந்தது.

சிலர் 50, 60 வயது வரை சினிமாவில் நடித்து பணத்தையும் சுகத்தையும் தேடி, இளம்காலத்தை சொகுசாக கழித்துவிட்டு தேவையான சொத்துகளை சேர்த்தபிறகு, காலாவதியான காலத்தில் அரசியலுக்கு வந்து அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள்.

அவர்கள் ஊர் ஊராகச் சென்று அழைந்து கொடியேற்ற வேண்டியதில்லை, மக்களை சந்திக்க தேவையில்லை, உடனடியாக கட்சியைத் தொடங்கி ஆட்சிக்கு போக நினைக்கிறார்கள்.

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை. அரசியல் வல்லுநர்கள் ஆராய்ந்து சொல்லி உள்ளார்கள்” எனத் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் மலிவு விலை கஃபே! டீ ரூ.10, சமோசா, வடை ரூ. 20!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலிவு விலை கஃபேவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு திறந்துவைத்தார்.நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் உணவகங்களை திறக்க வேண்டும... மேலும் பார்க்க

சென்னையில் கழிப்பறைகளைப் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம்! - உறுப்பினர்கள் எதிர்ப்பு!

சென்னையில் உள்ள அனைத்து கழிப்பறைகளையும் பராமரிக்க தனியாருடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாமன்றக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம்... மேலும் பார்க்க

ஹிந்தி, எத்தனை இந்திய மொழிகளை விழுங்கியிருக்கிறது தெரியுமா? - முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஹிந்தி எத்தனையோ இந்திய மொழிகளை விழுங்கி இருக்கிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் தமிழகத்திற்கு ரூ. 2,152 கோடி கல்வி நிதியை விடுவிக்க சட்டத்தில் இ... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: அமித் ஷாவின் விளக்கத்தை ஏற்க முடியாது! - ராமதாஸ்

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகளின்எண்ணிக்கையை குறைக்கக் கூடாது என்றும் 7.2% தொகுதிகளுக்கு உத்தரவாதம் தேவை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு திட்டமிட்டபடி தொகுதி மறுசீரமைப்ப... மேலும் பார்க்க

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்று: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

நிலுவையில் உள்ள வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கான தகுதிச் சான்றிதழ் விண்ணப்பங்களை மீண்டும் சமா்ப்பிக்க மாா்ச் 4 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது. இ... மேலும் பார்க்க

இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் மயிலாடுதுறை தொடங்கி கன்னியாகுமரி வரை கடலோரத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (பிப்.27) கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்புள்... மேலும் பார்க்க