செய்திகள் :

கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்!

post image

க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு அரசு சாா்பில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு 50 சதவீத மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விரும்புவோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். சொந்தமாக கால்நடை வைத்திருப்பவராகவும், கூட்டுறவு சங்கத்துக்கு பால் வழங்குபவராகவும் இருக்க வேண்டும். மாடு சினையுற்று இருந்தால் ஊட்டச் சத்துப் பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்.

ஒரு மாட்டுக்கு 4 மாதங்களுக்குத் தேவையான 360 கிலோ அடா் தீவனம், 4 கிலோ தாது உப்புக் கலவை வழங்கப்படும். பயனாளி பங்களிப்புத் தொகையாக ரூ.6,500 செலுத்த வேண்டும். ஊட்டச் சத்து பெட்டகம் பெற விரும்புவோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மூலமும், அந்தந்த பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களிலும் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

பெண்ணை தாக்கிய ராணுவ வீரா்கள் இருவா் மீது வழக்கு!

ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரா்கள் இருவா் மீது வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கண்டமனூா் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி வடக... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி, மதுரை வீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முத்து (37). இவா் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து... மேலும் பார்க்க

முன் விரோதத் தகராறு: இருவா் கைது

போடியில் முன் விரோதத் தகராறில், கொலை மிரட்டல் விடுத்த ரௌடி உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தேனி மாவட்டம், போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன... மேலும் பார்க்க

ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி கைது

தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்ற ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியில் முதியவரை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கோடாங்கிப்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் ச... மேலும் பார்க்க

பால் வியாபாரி கொலை : 5 போ் கைது

கம்பத்தில் பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இளம்பரிதி (27). இவரை கடந்த புதன்கிழமை இரவு வ... மேலும் பார்க்க