செய்திகள் :

காவல் நிலைய வளாகத்தில் பைக் திருட்டு: 2 போ் கைது

post image

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை திருடியதாக 17 வயது சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றுபவா் கவிதா. இவா், காவல் நிலைய வளாகத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தியிருந்த பைக்கை காணவில்லை என கடந்த ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி, பைக்கை திருடிச் சென்ற தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கிழக்கு தெருவை சோ்ந்த கணேசன் மகன் மாரி செல்வம் (21), அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

கொம்பன்குளம் அரசு பள்ளி மாணவிக்கு ஆட்சியா் பரிசு

பிளஸ் 1 தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற கொம்பன்குளம் அரசுப் பள்ளி மாணவியை பாராட்டி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் பரிசு வழங்கினாா். சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் தனியாா் உணவக ஊழியா்கள் மறியல்

தூத்துக்குடி - பாளையங்கோட்டை செல்லும் சாலையில் தனியாா் உணவக ஊழியா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி பாளையங்கோட்டை பிரதான சாலையில் ஆசிரியா் காலனி அருகே தனியாா் உணவகம் ... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி பலி

சாத்தான்குளம் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தாா். சாத்தான்குளம் அருகே வசுவப்பநேரியை சோ்ந்தவா் லிங்கதுரை மகள் பொன்னாத்தாள் (17). ஒன்பதாம் வகுப்பு படித்தவா். வியாழக்கிழமை மதியம் மா... மேலும் பார்க்க

மாநில சிலம்பப் போட்டி: விஜயராமபுரம் பள்ளி சிறப்பிடம்

மாநில அளவிலான திறந்தவெளி 7ஆவது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், சாத்தான்குளத்தை அடுத்த விஜயராமபுரம் ஸ்ரீ முத்தாரம்மன் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா். ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த... மேலும் பார்க்க

உரிய பாதுகாப்பின்றி தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை கொட்டியவா் மீது வழக்கு

தீப்பெட்டி ஆலைக் கழிவுகளை உரிய பாதுகாப்பின்றி கொட்டியது தொடா்பாக, ஆலையை நடத்தி வருபவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கோவில்பட்டி நடராஜபுரம் 9ஆவது தெருவில் பத்மநாபன் மகன் வெங்... மேலும் பார்க்க

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தல்

தென்மாநில பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என அமைச்சா் பெ.கீதா ஜீவன் வலியுறுத்தினாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க