செய்திகள் :

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேர் சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்!

post image

காஸாவில் உணவுக்காகக் காத்திருந்த 50 பேரை இஸ்ரேல் ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர்.

பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்ததில் இருந்து அங்கு போா் நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 57,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா்.

மேலும் தற்போது காஸாவில் உணவு தேடி, உணவு மையங்களை நோக்கிச் செல்லும் குழந்தைகள் உள்பட அங்குள்ள மக்களை இஸ்ரேல் ராணுவத்தினர் இரக்கமின்றி சுட்டு வீழ்த்துகின்றனர்.

இந்நிலையில் இன்று(ஜூலை 19) காஸாவில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உணவு மையங்களுக்கு அருகில் உணவுக்காகக் காத்திருந்த 32 பேரும் அடங்குவர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த மே 27 முதல் இதுவரை உணவுக்காக காத்திருந்த 800 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது.

உலக உணவுத் திட்ட அமைப்பு, காஸாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பசியால் மடிந்துவிடும் பேரழிவில் உள்ளனர். 3ல் ஒருவர் பல நாள்கள் உணவின்றித் தவித்து வருவதாகக் கூறியுள்ளது.

அதேபோல அங்கு இயங்கும் ஒரு சில மருத்துவமனைகளில்கூட போதிய மருந்துகள், எரிபொருள் இல்லை. இன்குபேட்டர் இன்றி பச்சிளம் குழந்தைகள் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இதனிடையே இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. காஸாவில் இருந்து மேலும் 10 பணயக் கைதிகள் விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாக டிரம்ப் இன்று கூறியுள்ளார். முன்னதாக ஓரிரு வாரங்களில் இஸ்ரேல் - காஸா இடையே போர்நிறுத்தம் வரலாம் என்று டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

50 Palestinians killed as Israel targets food aid sites in Gaza again

ஈரானில் பேருந்து விபத்தில் 21 பேர் பலி, 34 பேர் காயம்

தெற்கு ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள ஷிராஸில் பேருந்து கவிழ்ந்ததில் 21 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். உ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தின், ஹாங்கு மாவட்டத்தின்... மேலும் பார்க்க

நேரலையில் பேசிய செய்தியாளர் வெள்ளத்தில் மாயம்? விடியோ வைரல்!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் நின்றுக்கொண்டு பேசிய செய்தியாளர் ஒருவர், அந்த வெள்ள நீரில் அடித்துச் செல்லப்படும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாகிஸ்தான் நாட்டில், கடந்த சில வாரங்களாகவே ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வான்வழிப் பாதைகள் 2 நாள்களுக்கு மூடல்!

பாகிஸ்தான் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வான்வழிப் பாதைகள் இரண்டு நாள்களுக்கு மூடப்படுவதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் விமான நிலைய ஆணையம், அந்நாட்டின், சில தேர்ந்தெடுக்கப்ப... மேலும் பார்க்க

அரசியலை ஒருபோதும் விரும்பவில்லை, ஆனால்: எலான் மஸ்க்

அரசியல் மற்றும் அரசியலில் நுழைவதை தான் ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், வருங்காலத்தில் ஆபத்துகள் அதிகமாக இருந்ததால் வேறு வழியே இல்லாமல், எனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை உருவானது என்று டெஸ்லா நிறு... மேலும் பார்க்க

நைஜர்: பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 இந்தியர்கள் பலி! ஒருவர் கடத்தல்!

நைஜர் நாட்டின் தென்மேற்குப் பகுதியில், 2 இந்தியர்களை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதுடன், ஒருவரை கடத்தப்பட்டுள்ளதாகவும், இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.நைஜரின் தொஸ்ஸோ பகுதியில், கடந்த ஜூலை 15 ஆம் தேதி,... மேலும் பார்க்க